வியாழன், 10 பிப்ரவரி, 2011

வெளிச்சத்திற்கு வரும் அர்த்தங்கள்

வாழும் கலைக்கும்
துறவுக்குமான உறவு
புரியாத புதிர்தான்
இதுவரை.

சிறப்புச் சொற்பொழிவுகள்
இசை நிகழ்வுகள் மூலம்
அவிழ்க்கத் துவங்கியுள்ள புதிர்கள்

ஆளும் கட்சியுடன் போட்டியிடும்
ஃபிளக்ஸ் விளம்பரங்கள்
5000 இசைக் கலைஞர்களுடன் நாதவைபவம்
சிரீ ராம் கேட்வே நடத்துவதாக
சிரீ சிரீ ரவிசங்கரின் சிரித்த முகத்துடன்

மந்தையில் கட்டப் பட்ட மாடுகளுக்கு
இனவிருத்தியைத் தடைசெய்யும்
நிகழ்வுநினைவுக்கு வருகிறது.

துறவிற்கும் இனவிருத்திக்கும்
தொடர்பில்லைதான்
ஆனாலும் கேள்விகள்

அண்ணா பல்கலைக் கழகம்,
நெய்வேலி நிர்வாகம், திருப்பூர் முதலாளிகள்
சிரீ ராம் கேட்வே, பெங்களூர் நிர்வாகங்கள்
தியான நிகழ்ச்சிகளுக்கும் இசை நிகழ்ச்சிகளுக்கும்
அரங்கம் அமைக்க என்ன காரணம்.

கேட்டதைத் தராத முதலாளிகள்
கேட்காமலேயே இதைத் தருவதற்கு
நோக்கம் இல்லாமல் இருக்குமா?

ஐ.டி போன்ற தொழில் நுட்பம் கற்ற இளைஞர்களை
அமைதிப்படுத்த முயற்சிப்பது ஏன்?

பணி நேரமான 10 மணிநேரத்தை
12 ஆக உயர்த்தினாலும் பல் காட்டி
அடங்கிப்போக வேண்டும் என்பதற்காகவா?

இப்போது புரிகிறது
வாழும் கலைக்கான அர்த்தம்




நன்றி: தீக்கதிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக