வியாழன், 12 நவம்பர், 2015



மௌனச் சகுனிகள்……….
_______________________________________________________

தாய்மொழி தமிழ் தெரியும்….
ஆங்கிலமும் கூட கற்றுக்கொண்டோம்.
கார்ப்பரேட் முதலாளிகள்
எந்த மொழியில் பேசினாலும்
வார்த்தைகளுக்கான பொருள்
புரியவே இல்லை…
சுரண்டலைப் போல்…
.

மனிதநேயம் இருப்பதால் தான் விருப்ப ஓய்வாம்!
உருப்போட்ட வார்த்தைகளில்
ரத்த வாடை..

15வயது இளம் பெண்ணை
20வது திருமணம் செய்து கொள்ளும்
காமுகனுக்கும்..
19வயது இளைஞர்களை
வேலைக்கு அமர்த்தி 25வயதில்
தூக்கியெறியும் முதலாளித்துவத்திற்கும்
என்ன வித்தியாசம்?
முன்னது காமவெறி..
பின்னது லாபவெறி….

நேற்று நோக்கியா…
இன்று ஃபாக்ஸ்கான்..
நாளை…?

ராஜராஜனின் ஆயிரம் ஆண்டு
பிறந்த நாள் கொண்டாட்டத்தின்
வாள்(ய்) வீச்சு….. ஆட்சியாளர்கள்…
கார்ப்பரேட் ஷூக்களின் முன்
மண்டியிட்டு
மௌனம் சாதிக்கிறார்கள்…

பாண்டவர் ஐவருக்காக
மகாபாரதப் போர்…
சுற்றம் பார்க்காதே!
கிருஷ்ணனின் கீதாபதேசம்.

பல்லாயிரம் இளம் தொழிலாளர்களுக்கு
என்ன உபதேசம்?
விருப்ப ஓய்வா?
அப்படியானால்.. ஆட்சியாளர்களே…
நீங்கள்..
கார்ப்பரேட் துரியோதனன்களுக்கு
சகுனியல்லவா?...

தொழிலாளரின் மானம் காக்க
எந்த கிருஷ்ணனும் வரப்போவதில்லை…
போராட்டம்.. போராட்டம் தவிர…

எஸ். கண்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக