செவ்வாய், 29 ஜூன், 2010

கியூபா ஆதரவு மாநாடு 2008



கியூபா ஆதரவு மாநாடு 2008





உலகில் மிகக் குறைந்த வயதில் புரட்சியை நடத்தி வெற்றி பெற்ற வீர மறவர்கள் ஃபிடலும், சேவும், அவர்களுக்கு அன்றைய கியூப ஆட்சியாளர் பட்டி°டாவையும், அவருக்கு துணையாக இருந்த அமெரிக்கத் துருப்புகளை புறமுதுகிட்டு ஓடச் செய்வது, எளிமையாகவே இருந்துள்ளது. ஆனால் புரட்சிக்குப் பின் அமெரிக்காவும், அதன் ஆதரவு நாடுகளும் 48 ஆண்டுகளாக பின்பற்றி வரும் வர்த்தகத் தடை எனும் கொள்கை, மனித குலத்தை தூக்கி எரிந்து விட்ட, அரக்க குணம் படைத்த ஒன்றாகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரக்கத் தனத்தை எதிர்ப்பதில், கியூபாவில், புதிதாக கருவிற்குள் உருக் கொள்ளும் குழந்தையும் எதிர்க்கும் பழக்கம் கொண்டதாக மாறிவிட்டது. உலகில் அத்தகைய ஏகாதிபத்திய எதிர்ப்பு, கியூப ஆதரவு என்ற சகோதரத்துவக் கரங்களை பற்றி நிற்பதில், கியூபாவின், சர்வதேச நட்புக் கழகம், தீவிரப் பணியாற்றி வருகிறது.
அதன் ஒரு பகுதியாகத் தான், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் 4வது கியூப ஆதரவு மாநாடு இலங்கையின் தலைநகர், கொழும்புவில் நடை பெற்றது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக, உள்நாட்டுப் போர் நடத்திக் கொண்டிருக்கும் இலங்கை மக்கள், கியூப ஆதரவு மாநாடு குறித்த செய்தியை எப்படி எடுத்துக் கொண்டார்கள், என்பதை ஆராய நமக்கு, வாய்ப்புகள் இல்லை. எப்போது, எங்கு குண்டு வெடிக்கும்? எத்தனை பேர் பலியாவார்கள்? என்பதை தெரியாமல், பீதியுடனும், கலக்கத்துடனும் ஒடிக் கொண்டி ருக்கும் தமிழர், சிங்களர் என எந்த இனத்தை சார்ந்த இலங்கை குடிமகனிடமும், இது குறித்து சர்வதேச அரசியல் குறித்து விவாதிப்பது, கடினமாக இருக்க வில்லை. கியூப ஆதரவு மாநாட்டிற்காக, 18 நாடுகளில் இருந்து கொழும்பு வந்திருந்த பிரதிநிதிகள் கலதாரி என்ற பழமை யான நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப் பட்டனர். மாநாடு நடைபெற்ற ஜூன் 14,15 தேதி களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு, ஹோட்டலுக்கு அருகில் குண்டு வெடித்து 10 பேர் பலியாகினர். என்ற செய்தி கொழும்பு மக்களுக்கு பழகிப் போன செய்தி, ஆனால் வெளிநாட்டுப் பிரதிநிதிகளை சற்று கலக்க மடையச்
செய்த செய்தி.

இப்படி உள்நாட்டு யுத்தத்தில், தத்தளித்துக் கொண்டிருக்கும் இலங்கை மக்களிடம், கியூப சோசலிஸத்தைப் பாதுகாக்கும் ஆதரவு மாநாடு, அவசியமா? என்ற கேள்வி எழலாம். கஷ்டத்தை அனுபவிக்கும் எவரொருவருக்கும், இன்னொரு வரின் கஷ்டத்தை, துன்பத்தை புரிந்து கொள்ள முடியும், என்பதை அங்கு பார்க்க முடிந் தது. ஆம் இலங்கையில் உள்ள, பொது அரசியல் வெளியில் உலா வருகிற, அனைத்து அர சியல் கட்சிகளும், கியூப ஆதரவு மாநாட்டின் பிரதிநிதி களாகக் கலந்து கொண்டனர். மாநாட்டை நடத்து வதிலும் முன் நின்றனர் . விமான நிலை யத்தில் வரவேற்பது துவங்கி, தங்கவைப்பது, மாநாட்டு அரங்கிற்கு அழைத்து செல் வது உள்ளிட்ட அனைத்துப் பணிகளிலும் ஈடுபடுட்ட அனைத்து அமைப்பின் ஊழியர்களின் அர்ப்பணிப்பு உணர்வு போற்று தலுக்கு உரியது . தமிழரா? சிங்களவரா? என்ற பாகு பாடுகள் அங்கிருந்த உபசரிப்பில் பார்க்க இயல வில்லை. வவுனியா.. யாழ்ப் பாணம் என, இலங்கை யின் பிரதான உள்நாட்டுப் போர் நிகழும் இடங் களில் இருந்தும் பிரதிநிதிகளாக சுப்பிரமணியம், மோகன், கதிர்காமர் போன்ற அன்புக் குரியவர் களும் பிரநிதிகளாக கலந்து கொண்டு உரையாடி னர். பல தமிழ் அமைப்புகளைச் சார்ந்தோரும் கலந்து கொண்டனர். சிங்களர், தமிழர் என்ற உணர்வுகளைக் கடந்த சர்வதேசவாசிகளாகவே, இரு பிரிவு ஊழியர்களும் தெரிந்தார்கள்.

இத்தகைய சர்வதேச சமூக உணர்வை அமெரிக்காவே கியூபா மீதான பொருளாதார தடைகளை வாப° பெறு என்ற முழக்கத்தின் கீழ் ஒன்று திரட்டிய பெருமை, கியூப மக்களுக்கு உண்டு என்று சொன்னால், அது மிகையல்ல. கியூபா ஒரு சோச லிஸத்திற்கான பாதையில் பயணப் பட்டுக் கொண்டி ருக்கும் நாடு பொருளாதாரத் தடை கிடைத்த ஆதரவு சோவியத் சிதைவிற்குப் பின் நின்று போனது, சிறப்புக் காலகட்டம் என்ற பெயரில் வறுமையை அனுபவித்தது, மின்தடை, உணவுப் பற்றாக் குறை போன்ற கொடிய சூழலை எதிர்கொண்டது. என பல்வேறு அனுபவங்களைக் கொண்ட நாடு என்பதால், தனது எதிரிக்கும், தான் அனுபவித்த துயர நிலை வரக்கூடாது, என்று நினைக்கிற நாடு கியூபா. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகா ணத்தை அட்லான்டிக் பெருங்கடலில் புயல்கள் சூறையாடிய போது, உதவிக்கரம் நீட்டிட முதன் முதலாக முன் வந்ந நாடு கியூபா. அமெரிக்காவில் மார்பகப்புற்று நோய் காரணமாக இறக்கும் பெண்கள் எண்ணிக்கை அதிகம். கியூபா தான் கண்டறிந்த மருந்தை விநியோகிப்பதற்கு முன் வந்த பெருமை கொண்ட நாடு. பாகி°தானில் பூகம்பம், இலங்கையில் சுனாமி, இந்தோனேசியாவின் பூகம்பம், அங்கோலா, iஐரே, உள்ளிட்ட பல ஆப்பிரிக்க நாடுகளில் உள்நாட்டுப் போர் என எந்தப் பகுதியில், இயற்கையும், செயற்கையும் மனித உயிர்களைப் பலிவாங்கினாலும், அங்கே மருத்துவர்களையும், மருந்துகளையும் அனுப்பும் முதல் நாடு கியூபா. கடந்த 15 ஆண்டுகளாக கடுமையான வறுமையை சந்தித்து, வெற்றி கொண்டு பின் முன்னேறிய நாடு கியூபாவைத் தவிர வேறு எந்த நாடும் இருக்க முடியாது. இப்படி தான் பெற்ற துயரத்தைப் பெறக்கூடாது, வையகம், என கியூபா செயல்படுகிற காரணத்தால் தான், கியூபாவிற்கான சகோதரத்துவத்தை வெளிப் படுத்துவதில் இலங்கையின் பெரும்பான்மையான கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டன.
கியூபாவிற்கு ஆதரவு தெரிவித்து உலகில் 145 நாடுகளில் 2000க்கும் அதிகமான நட்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிய பசிபிக் பிராந்தியத் தில் 2006ன் போது, நூறு குழுக்கள் மட்டுமே இருந்த நிலை 2008ல் மாறியுள்ளது. ஆசியக் கண்டத்தில் 21 நாடுகளில், கியூபாவுக்கு நட்புக் கரத்தை நீட்டுகிற 206 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. உலகின் வேறு எந்த நாடும். எல்லை களையும், அதிகாரத்தையும் கடந்து மனிதர்களை நட்பு கொண்டதாக வரலாறு இல்லை.

கியூபாவிற் கான ஆதரவு என்பது, அமெரிக்காவிற்கு எதிர்ப்பு போன்ற அர்த்தத்தை, தெளிவுபடுத்தும், மந்திரச் சொல் என்றால், மிகையல்ல. அமெரிக்காவின் 11 அதிபர்கள் 48 ஆண்டுகளாக கியூபா மீது வெறுப் பை உமிழ்ந்தவர்கள் என்பது வரலாற்று உண்மை. அமெரிக்காவின் மியாமி மாகாணத்தில் இருந்து, கியூபாவிற்கு எதிரான தீவிரவாதிகளை தூண்டி வருகிற நாடு அமெரிக்கா. கியூபாவின் அதிபராக இருந்த ஃபிடல்கா°ட்ரோவை கொலை செய் வதற்கு 600க்கும் அதிகமான முறை முயற்சிகள் செய்து, அம்பலப்பட்டுப் போன நாடு அமெரிக்கா. கியூபாவின் பன்றி வளைகுடாவின் மீது அமெரிக்கத் துருப்புகள் படையெடுத்து தோல்வியைச் சந்தித்த நாடு அமெரிக்கா. ஏலியன் என்ற 6 வயது சிறுவனும், அவன் தாயும் பயணம் செய்த படகு விபத்திற்குள்ளான போது, சிறுவனின் தாய் இறந்து போகிறார். ஏலியனை மியாமியில் பிடித்து வைத்துக் கொண்டு அரசியல் நடத்தி, கியூபா மற்றும் உலக மக்களின் தொடர் போராட்டம் காரணமாக 2 ஆண்டுகள் கழித்து விடுவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளான நாடு அமெரிக்கா. இத்தனை தோல்விகளை அமெரிக்கா பெறுவதற்கு காரணம் ஒன்றே ஒன்று தான், அது கியூபா உலக மக்கள் மீது கொண்டி ருக்கும் காதலைத் தவிர வேறில்லை.

அத்தகைய காதலும், அன்பும், நட்பும் இலங்கையின் மக்களிடமும் கியூபா கொண்டிருப் பதைப் பார்க்க முடிகிறது. 1959, ஜன 1 அன்று கியூப புரட்சி வெற்றி பெற்றது. புரட்சியின் நாயகர்களில் ஒருவரான சே உடனடியாக உலகின் பல நாடு களுக்குப் பயணம் செய்து கியூப புரட்சியைப் பாதுகாப்பதற்கான உதவிகளையும், நேசக்கரத் தையும் பெறுவதற்காக முயற்சிகளை மேற் கொண்டார். அப்படி பயணம் செய்த நாடுகளில் ஆசியாவில் முக்கியமான நாடு இந்தியாவும், இலங்கையும், ஆகும். இந்தியா அணி சேரா நாடுகளை ஒன்றிணைத்து செயல்பட்ட போது, அதில் அங்கம் வகித்தது மட்டுமல்ல. இன்று அணிசேரா நாடுகளை ஒருங்கிணைத்து அதன் தலைவராக கியூபா செயல்பட்டும் வருகிறது. இலங்கைக்கு வந்து போன சே தனது பயணத்தின் நினைவாக மரக்கன்று ஒன்றினை யாகாலாகேலே என்ற தோட்டத்தில் நட்டு வைத்து சென்றதை, இன்னும் பாதுகாக்கின்றனர், 1959ம் ஆண்டு ஆக°ட் 8ம் தேதி நடப்பட்ட மரம் தற்போது பொன்விழா ஆண்டிற்கு தயாரகிக் கொண்டிருக் கிறது. இலங்கையில் சிங்களர், தமிழர் இனவேறு பாடு காரணமாக, உருவான பல தமிழர் போர்க் குழுக்களில் ஒன்றாக, சேகுவேரா புரட்சிப் படையும் இருந்துள்ளது கவனிக்கத் தக்கது. அந்த அளவிற்கு, கியூபாவின் புரட்சியும், அதன் நாயகனாக இருந்த சேயும் இலங்கை மக்களிடம் மரியாதையைப் பெற்று இருந்திருக்கின்றனர். இன்றும் மதிக்கின்றனர். கியூபாவுக்கான ஆதரவை வெளிப்படுத்துவதில் இலங்கை, பல நாடுகளைப் போல் முன்னணியில் இருக்கிறது. இலங்கை, அமெரிக்கா கியூபா மீது விதித்த பொருளாதாரத் தடையை எதிர்த்து 12 முறை ஐக்கிய நாடுகள் சபையில் வாக்களித்து இருக்கிறது, என்ற செய்தி நமது தலைமுறையினருக்கு மிக முக்கியமானது. கியூப ஆதரவுக்கான இலங்கை மக்களின் சர்வதேசப் பார்வை மென்மேலும் வளர்ந்து, இலங்கைக்குள்ளிருக்கும் இனவேறுபாட்டை ஒழிப்பதில் வெற்றி பெறுமானால், அது சே வுக்கு செலுத்துகிற அஞ்சலியாக இருக்கும். ஏனென்றால் உலகில் காணும் அநீதியை எதிர்த்துப் போராடு வாயானால் நீயும் நானும் தோழனே! என்ற வரிகளுக்கு சொந்தக்காரன் சே.

இலங்கையில் நடைபெற்ற கியூபா ஆதரவு மாநாட்டிற்கு சென்று வந்த பொது இளைஞர் முழக்கம் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரை

செவ்வாய், 15 ஜூன், 2010

ஆட்சியாளர்களின் கொள்கை-பல போபால்களை உருவாக்கும்


ஆட்சியாளர்களின் கொள்கை-பல போபால்களை உருவாக்கும்!
எஸ்.கண்ணன்
உலகம கடும் துயரங்களைச் சந்திக்கும்
கொடிய மக்களின் வன்முறைகள் காரணமாக அல்ல,
நல்ல மனிதர்களின் மௌனம் காரணமாக.
-பிரெஞ்சு ஆட்சியாளராக இருந்த நெப்போலியன்
2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம், 7ம் தேதி, போபால் நீதிமன்றத்தின் தீர்ப்பை படித்த போது, நெப்போலியனின் வரிகள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை. 25 ஆயிரத்திற்கும் அதிகமான மனிதர்கள் இறந்தது, ஏதோ அறியாமையில் நடந்த விபத்து அல்ல. அமெரிக்காவைச் சார்ந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருந்தவர்களின் அலட்சியத்தினால் நடந்தது என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன.
மீதைல் ஐஸோ சயனைட் வாயுவின் கசிவு, மனித உயிர்களைக் குடிக்கும் என்பதற்கான சம்பவங்கள், மேற்படி நிறுவனத்தில் ஏற்கெனவே இரண்டு முறை நிகழ்ந்துள்ளது. ஒன்று டிச-25, 11981 ல் அஸ்ரப் கான் என்ற தொழிலாளி கசிவின் காரணமாக இறந்துள்ளார். இரண்டு, 11982, ஜன-9 அன்று மிக மோசமான நிலையில் 25 தொழிலாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவை இரண்டையும், சிபிஐ தனது விசாரணையில் பதிவு செய்துள்ளது (தி இந்து 09.06). இதன்பிறகு, 30 விதமான பிரச்சனைகள், யூனியன் கார்பைடு நிறுவனத்தின், இயந்திர செயல்பாடுகளில் இருப்பதாக கண்டறிந்து, அவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும், என்ற ஆலோசனையும், நிறுவனத்தின் உயரதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நிறுவனமும், அதன் அதிகாரிகளும் மேற்படி ஆலோசனைகளை உதாசீனப்படுத்தியுள்ளனர். 1984, டிச.2 அன்று இரவு யூனியன் கார்பைடு தொழிற்சாலை செயல்பட்ட போது, மேலே குறிப்பிட்ட இயந்திர கோளாறுக்ள் சரிசெய்யபடவில்லை, அபாயச் சங்கு கூட செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. எனவே தான் விபத் நடந்ததை அறிவிக்க முடியாமல், பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள், படுக்கையிலேயே மரணத்தைத் தழுவும் உலக மகா கொடுமை நிகழ்ந்துள்ளது.

இந்த உறைய வைக்கும் கொடூர உண்மையை ஆதாரமாகக் கொண்டு தான், 8 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர். ஆனால், குற்றவாளிகளுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை இந்திய மக்களையும், மக்கள் இயக்கங்களையும் ஏளனம் செய்வதாக அமைந்துள்ளது. 225ஆயிரத்திற்கும் அதிகமான மனித உயிர்களின் இழப்பை, 5லட்சம் மக்களின் உடல் உபாதையை, ஒரு பஸ் விபத்துபோல் நீதிமன்றம் கையாண்டு உள்ளது.

பன்னாட்டு நிறுவனங்களும்- அரசின் பின்புலமும்

போபால் விஷவாயு கசிவு ஏற்பட்ட போது, உலகமயமாக்கல் கொள்கை, தீவிரம் காட்டவில்லை. உலகின் பன்னாட்டு நிறுவனங்களுக்கான சுதந்திர மற்றும் தாராள அனுமதி தலை தூக்கவில்லை. இந்திய அரசின் தொழிலாளர் சட்டங்களும், கம்பெனி சட்டங்களும், பெரும் நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அதிகாரத்துடன் இருந்தது. அப்படி இருந்த போதும் வெளிவந்துள்ள தீர்ப்பு, மனித உரிமையை மிகக் கீழ்த்தரமாக மதிப்பிட்டு அமைந்துள்ளது.
ஆனால், இன்றைய நிறுவனங்கள் இந்திய மண்ணில் கால் வைக்கும் போதே, புரிந்துணர்வு ஒப்பந்தங்களுடன் தான் கால் பதிக்கின்றன. அரசு வைக்கும் நிபந்தனைகளை விட, நிறுவனங்கள் முன்வைக்கும் நிபந்தனைகளே அதிகம். நிறுவனங்களுக்கான அதிகாரங்களும், சலுகைகளும் அதிகரித்துள்ள சூழலில் போபர்ஸ் விஷவாயு பலி, குறித்த தீர்ப்பானை கணக்கு சொல்லாமல் இருந்தால் எதிர்காலம் வேதனையைத் தவிர வேறு எதையும் தருவதாக அமையாது.

உதாரணத்திற்கு, யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர், வாரென் ஆண்டர்சன் பாதுகாக்கப்படுவதை மக்கள் இயக்கம் மௌனமாக வேடிக்கை பார்க்க முடியாது, வாரென் ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது,"வாரென் ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது", என்ற அமெரிக்க அரசின் அறிவிப்பை, இதுவரை இந்திய ஆட்சியாளர்கள் கண்டிக்கக்கூட செய்யவில்லை. 2008 நவம்பர் 26 அன்று மும்பையில் நடைபெற்ற தீவிரவாதிகளின் செயலுக்கு திட்டமிட்டு கொடுத்த, ஹெட்ஸ் விவகாரத்திலும் அமெரிக்கா இதே வரிகளைத்தான் பயன்படுத்தியது.

இவ்வளவு மனித உயிர்களைப் பலி கொண்ட, கொலைகார நிறுவனத்துடனும் அதன் அதிகாரிகளுடனும் இந்திய அரசு 26 ஆண்டுகளாக சமரசத்திற்கு மட்டுமே முயற்சி மேற்கொண்டுள்ளது. லால் என்கிற முன்னாள் சிபிஐ அதிகாரி, தீர்ப்பு வெளிவந்தபின் அரசும், அதிகாரிகளும் சிபிஐ விசாரணையில் குறுக்கீடு செய்தார்கள் என்பதை தெரியப்படுத்தி உள்ளார். அப்பட்டமாக, உலக முதலாளிகளை பாதுகாக்கும் தன்மையுடன் செயல்பட்டுள்ளது.
மக்கள் இயக்கங்களின் போராட்டம் காரணமாகவே வழக்கு நீடித்து உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத்தொகையை வழங்கக் கோரி, 2004,அக்.25 வரை மக்கள் இயக்கங்கள் போராட்டம் நடத்தி உள்ளன. இதன் பிறகு இந்திய உச்சநீதிமன்றம் 2004 அக்.26 அன்று பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு தொகையை, நவ.15ம் தேதிக்குள் வழங்கவேண்டும் என உத்தரவிட்டுள்து. நீண்ட நெடிய போராட்டத்தின் கிடைத்த, இழப்பீட்டுத் தொகை ரூ.15 ஆயிரத்தை தாண்டவில்லை என்பது அதிர்ச்சியான தகவல். மொத்தத்தில் 47 கோடி டாலர் அதாவது சுமார் ரூ.200 கோடி மட்டுமே இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது
.
அணூ உலை ஒப்பந்தமும்- போபால் தீர்ப்பும்

யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே, என்ற பழமொழியைப் போல், போபால் விஷவாயு கசிவின் அழிந்து போன மனிதர்களை, இந்திய அரசு கருணை கொண்டு பரிசீலிக்காது என்பதை அமெரிக்காவுடனான அணு உலை ஒப்பந்தத்தினை வெளியிட்ட போதே அறிய முடிந்தது. அணு உலை விபத்து தடுப்பு மற்றும் இழப்பீட்டு மசோதா ஒன்றை மன்மோகன் சிங் தலைமையிலான அரசாங்கம், 2009 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தது. மசோதாவின் 2வது பாகம், 6வது பிரிவு,
"ஒவ்வொரு அணு விபத்து ஏற்படுகிறபோதும், அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை ரூ.2,208 கோடியாக மட்டுமே இருக்கவேண்டும்.(300 மில்லியன் டாலர் அல்லது 471.38 மில்லியன் டாலர்) அதில் அணு உலையை செயல்படுத்தும் நிறுவனத்தின் சட்டபூர்வமான பங்கு ரூ.300 கோடியைத் தாண்டாது. ஒரு வேளை ரூ.300 கோடியைத் தாண்டுமானால் மத்திய அரசு அந்தத் தொகையைத் தர முன்வர வேண்டும்". என்று குறிப்பிடுகிறது. இது குறித்த விவரம் பிரகோட்டி இணையதளத்தில் 2009 டிசம்பர் 21 அன்று வெளிவந்துள்ளது.

மேற்படி ஆபத்து நிறைந்த மசோதா, இந்திய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளின் எதிர்ப்பு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது போபால் விஷவாயு படுகொiடில மீதான தீர்ப்பு, இந்திய அரசின் அமெரிக்க ஆதரவு கொள்கையின் வெளிப்பாடே ஆகும். அமெரிக்கா மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் உரிமைக்காக, குரல் கொடுக்கிற ஆட்சியாளர்களாக, இந்திய ஆட்சியாளர்கள் உள்ளனர் என்பதற்கு, இப்போது வந்திருக்கிற தீர்ப்பை தவிர வேறு சம்பவங்கள் தேவையில்லை.

அணு உலை குறித்த-இழப்பீட்டு மசோதாவை முன்மொழிவதற்கு சட்ட வரைவு தயாரிக்கப்பட்ட நேரத்தில், முன்னாள் அரசு அட்டர்னி ஜெனரல், சோலி சொராப்ஜி தனது ஆட்சேபனையை பதிவு செய்துள்ளார். இது போன்ற சட்டமுன் மொழிவுதான், இந்திய அரசியல் சட்டம் இந்திய மக்களுக்கு வழங்கியுள்ள மனித உரிமைகள் மற்றும் வாழும் உரிமை குறித்த அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கு ஒப்பாகும். எந்த ஒரு நாகரீக சமூகத்தின் ஜனநாயக அரசும், மக்களின் பாதுகாப்பு குறித்த அடிப்படை அக்கறையை விட்டு கொடுக்க முன்வராது" என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி மத்திய அரசை முன் எச்சரிக்கை செய்திருக்கிறார். ஆனாலும் மத்திய அரசு மேற்படி மசோதாவை முன்மொழிந்து பின் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக, நிறுத்தி வைத்துள்ளது.

தொழில் வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில், நாட்டின் இறையாண்மை மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விட்டுக்கொடுப்பதை, உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கைகள், அடிப்படை கடமையாகக் கொண்டுள்ளன. அமெரிக்காவைச் சார்ந்த ஜான் பெர்க்கின்ஸ், என்ற மனிதர், ஒரு பொருளாதார அடியாரின் வாக்குமூலம், மற்றும் அமெரிக்கப் பேரரசின் ரகசியம் ஆகிய புத்தகங்கள் மூலம் ஊழல் நிறைந்த அரசு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இடையிலான மூலம் ஊழல் நிறைந்த ஒப்பந்தங்களை குறிப்பிட்டு இருக்கிறார். இன்றைய காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசின் ஒப்பந்தங்களும் ஜான் பெர்க்கின்ஸ் குறிப்பிட்ட தன்மையில் தான் நடைபெறுகிறதோ? என்ற சந்தேகங்கள், போபால் தீர்ப்பின் மூலம் உண்மையாகிக் கொண்டிருக்கிறது.
போபால் கொடூரத்தின் மீது அரங்கேற்றப்பட்டுள்ள ஆட்சியாளர்களின் கொள்கைகளை நல்லவர்கள் மௌனமாக வேடிக்கை பார்ப்பது தொடர்ந்தால் நாட்டின் துயரங்கள் அதிகரிக்கத்தான் செய்யும்.

திங்கள், 14 ஜூன், 2010

மானுடவியல் நூல்கள் தமிழில்?


மானுடவியல் நூல்கள் தமிழில்?

‘மானுடவியல்’ என்ற வார்த்தை சமீப காலங்களில், தமிழ் எழுத்தாளர்களால் கூடுதலாக கையாளப்பட்டு வரும் வார்த்தைப்-பதம். 150 ஆண்டுகளாக வளர்ச்சி பெற்று வரும் துறை மானுடவியல் என்று கூறலாம். மனிதனின் அனைத்து விதமான பண்புக் கூறுகளையும் படிக்கிற துறை மானுடவியல் என வரையறை செய்துள்ளனர். (Comparative study of human being). சமூகவியலுடன் பல இடங்களின் ஒற்றுமை காணுகிற குணம் மானுடவியலுக்கு உண்டு. உடலியல் மானுடவியல் (Physical Antropology), சமூக மானுடவியல் (Social Anthropology), பண்பாட்டு மானுடவியல் (Cultural Anthropology), மொழியியல் மானுடவியல் (Linguistic Anthropology), உளவியல் மானுடவியல் (Psychological Anthropology), அரசியல் மானுடவியல் (Political Anthropology), பொருளாதார மானுடவியல் (Economical Anthropology) ஆகிய பிரிவுகள் முக்கியமானவை.

பிரிட்டானியா தகவல் களஞ்சியம் மானுட-வியல் குறித்து குறிப்பிட்டுள்ளது. மனித இனத்தைப் பற்றிய ஆய்வு, மானுடவியல் அறிஞர்கள் ஹேமோ சாப்பியன்களின் (Homo Sapiens) உயிரியல் மற்றும் பரிணாம வளர்ச்சி முதல், பிற விலங்கினங்-களைத் தெளிவாக வேறுபடுத்துகிற, சமுதாயப் பண்பாட்டு தனிச்சிறப்புகள் வரை மனிதர்கள் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து ஆராய்கின்றனர். பல்வேறு வகையான வடிவங்களை தன்னகத்தே கொண்டுள்ளமையால், மானுடவியல் 20_ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இருந்து மிகவும் தனித்தன்மை வாய்ந்த துறைகளின் தொகுப்பாக மாறி விட்டது. உயிரியல் மற்றும் மானுடப் பரிணாம வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துகிற பிரிவு, பவுதீக மானுடவியல் ஆகும். மனிதக் குழுக்களின் சமுதாய, பண்பாட்டுக் கட்டமைப்பினை ஆய்வு செய்கிற பிரிவுகள் பண்பாட்டு மானுடவியல் (அல்லது மனித இன வேறுபாட்டு ஆய்வியல்), சமூக மானுடவியல், மொழி சார்ந்த மானுடவியல்., உளவியல் மானுடவியல் என அறியப்படுகின்றன. வரலாற்றுக்கு முந்தைய பண்பாடுகளை ஆய்வு செய்யும் தொல்லியல் துறை என்பதும், மானுட-வியலின் ஒன்றிணைந்த பகுதி-யாகவே இருக்கிறது. ஏனெனில் 19_ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து இது மனிதர்களைப் பற்றியே அதிகம் கவனம் செலுத்தும் ஒன்றாக மாறியுள்ளது.

ஐரோப்பியர்கள் மானுட-வியல் துறை வளர்ச்சி பெறுவதற்கு முன்னதாகவே, மானுடவியல் அணுகுமுறை தங்களின் வர்த்தகத்-திற்கும், காலனி ஆதிக்க செயல்பாட்-டிற்கும் பயன்படுத்திக் கொண்டனர். அநேகமாக ஐரோப்பியர்கள் தங்களின் காலனியாதிக்க நாடுகளில் மேற்கொண்ட ஆய்வுகளே, மானுடவியல் துறை குறித்த அறிவை வெளிப்படுத்தி-யதைப் பார்க்க முடியும். ஆப்பிரிக்க கண்டத்தின் அனைத்து நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட இனவரைவியல் மற்றும் பண்பாட்டு மானுடவியல், மனித குலத்தை, பின்னோக்கி சுயப் பரிசோதனை செய்து கொள்வதற்கான வாய்ப்பினை வெளிப்படுத்-தியது. லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களில் செய்யப்பட்ட ஆய்வுகள் பல உட்கூறுகளை, வெளி உலகிற்கு கொண்டு வர உதவி செய்தது. ஒரு புறத்தில் அரசியல் மேலாதிக்கம் மற்றும் பொருளாதார சுரண்டலுக்கு இத்தகைய அணுகுமுறை ஐரோ
ப்பியர்களுக்கு உதவியது என்ற போதிலும் சமூகத்தின் பின்தங்கிய நிலையையும், அந்த பின்தங்கிய நிலையில் இருந்த மக்களிடம் காணப்-பட்ட சொந்த தொழில்நுட்பமும் (Indigenious Technology) பருவ நிலை மாற்றத்திற்கேற்ற அணுகு-முறையையும் வெளிக் கொணருவதில் ஐரோப்பி-யர்கள் பங்காற்றியுள்ளனர். ஐரோப்பியர்கள் மேற்கொண்ட இத்தகைய சமூக ஆய்வுகள், 19ம் நூற்றாண்டின் மிகப் பெரிய தொழில் நுட்ப வளர்ச்சியை அடைய அவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டும்.

மாலினோவஸ்கி, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மக்களுடைய வர்த்தக முறையை வெளிக் கொணருவதில் சிறந்த பங்கு வகித்தார். ரேட்கிளிப் ப்ரௌன், பொலாயினி, டெய்லர், லெவிஸ்ட்ராஸ் போன்றவர்கள் ஆப்பிரிக்காவைச் சார்ந்த நியூயர்
(Nuer) மக்களின் அரசியல் மற்றும் மேய்ச்சல் பொருளாதாரம் குறித்த அறிவை வெளிக் கொணர்ந்தனர். ஆசியாவின் இதர பகுதிகளிலும், இந்தியாவின் பல்வேறு பிரிவினரையும் ஆய்வு செய்து, இனவரைவியல் நூல்களை ஐரோப்பிய மானுடவியல் அறிஞர்கள் பலர் வெளியிட்டனர். மத்தியப் பிரதேசத்தைச் சார்ந்த முரியா கோண்ட்ஸ், அஸ்ஸாமின் காசி, இசைக் குழுவினர் (தாய்வழிச் சமுதாயத்திற்கான உதாரணம்) மற்றும் வடகிழக்கின் பல பிரிவினர் இதுபோன்ற ஆய்வுகளுக்கு உள்படுத்தப்பட்டவர்களே.

நமது மத்திய, மாநில அரசுகள் பின்பற்றுகிற இடஒதுக்கீடு கொள்கைக்கு, தற்போதைய அறிஞர்களாக கருதப்படுவோர் கே.எஸ்.சிங் மற்றும், எஸ்.சி. துபே ஆகியோர் ஆவர். இவர்களுக்கு முன்னோடியாக எட்கர் தர்ஸ்டன் என்பவர் இருந்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம்.
பிரிட்டிஷ் நாட்டைச் சார்ந்த எட்கர் தர்ஸ்டன் 1885_ம் ஆண்டு சென்னை அருங்காட்சி-யகத்தின் கண்காணிப்பளராக பணியமர்த்தப்பட்டார். கால் நூற்றாண்டு காலம் அவர் சிறப்பாகச் பணியாற்றியதன் விளைவே, சென்னை அருங்காட்சி-யகத்தில் இன்று நாம் காணக்கூடிய பல பொருள்கள். இதே காலத்தில் தான் பிரிட்டிஷ் அரச நாட்டில் உள்ள இனவியல் குறித்த ஆய்வுக்கும் தர்ஸ்டனைத் தேர்ந்தெடுத்தனர். அவர் ஆய்வு செய்து பின் ஏழு தொகுதிகளாக 1909_ம் ஆண்டு வெளியிடப்பட்ட நூலே ‘தென்னிந்திய குலங்களும் குடிகளும்’ என்ற நூல். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் இதன் 5 தொகுதிளைத் தமிழில் வெளியிட்டுள்ளது. 1986_ல் துவங்கிய இப்பணி இன்னும் நிறைவு பெறவில்லை. தர்ஸ்டனின் பணி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியினரையும், சாதிகளையும் ஆய்வு செய்வதாக இருந்திருக்கிறது. இன்றைக்கும் ‘சாதி’ குறித்த அதிகார வர்க்கத்தின் புரிதல், தர்ஸ்டனின் வழிகாட்டுதலில் இருந்தே கிடைக்கப்பெறுகிறது
.
தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் கள்ளர் சாதி, பண்பாடு, சமூக அமைப்பு, விவசாயப் பொருளாதாரம், அரசியல் இவை குறித்து கேத்தலீன் காஃப், மேக்கிம் மீரியட் போன்ற பெண் மானுடவியலாளர்களும், ஆந்தர பட்டேல் என்ற மானுடவியல் அறிஞரின் ஆய்வு நூல்களும் பேசு-கின்றன. மதுரை மாவட்டத்தில் லூயிஸ் டுமான்ட் என்பவர் ஆய்வு செய்து வெளியிட்ட தென்னிந்திய துணை சாதி (South Sub Caste) என்ற நூலும் மிக முக்கியமானவை. இத்தகைய ஆய்வாளர்களின் நூல்கள் வெளிவந்து பல பத்து ஆண்டுகள் ஆனாலும் தமிழ் வாசகர்களுக்கு மொழிப்பெயர்க்கப்-படாதது பலகீனமே. தமிழில் மானுடவியல் எனும் தலைப்பில் மிகக் குறைவான நூல்கள் வெளியாகி-யுள்ளன. அதில் பாண்டிச்சேரி மொழி மற்றும் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர், பக்தவச்சலபாரதிக்கு கனிசமான பங்குண்டு. சமூக மற்றும் பண்பாட்டு மானுடவியல், தமிழர் மானுடவியல் ஆகியவை முக்கியமானவை ஆகும். பக்தவச்சலபாரதி மொழியாக்கம் செய்து அடையாளம் பதிப்பகம் வெளியிட்ட சமூக _ பண்பாட்டு மானுடவியல் மிகச் சுருக்கமான அறிமும் (ஜான் மோகனன் _ மீட்டர் ஜஸ்ட் எழுதியது) என்ற நூலும் காணக் கிடைப்பவைகளில் ஒன்று.

தமிழகத்தில் நமது சமகாலத்தில் மானுட-வியலின் முழுமையான கோட்பாட்டு அடிப்படை-யில் இல்லை என்றாலும், பேரா. ஆ. சிவசுப்பிர-மணியன், பேரா. தொ. பரமசிவன் போன்றோரின் நூல்கள், தமிழ் சமூகத்தினை மானுடவியல் அணுகுமுறையில் பார்க்க, படிக்க உதவி செய்கின்றன. கல்வி வளாகங்களுடக்குள் ஆய்வு முறையினை முறையாக கற்று ஆய்வு செய்து வெளியிடும் நூல்களுக்கு இடையில், தமிழ் நாவலாசிரியர்களின் மானுடவியல் முயற்சி சிறப்பு வாய்ந்தது. கி. ராஜ நாராயணனின் கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், கு. சின்னப்ப பாரதியின் ‘சங்கம்’, ‘சர்க்கரை’, ‘சுரங்கம்’ போன்ற நாவல்கள், எஸ். ராமகிருஷ்ணனின் ‘நெடுகுருதி’, பால முருகனின் ‘சோளகர் தொட்டி’ ஜோ.டி. குரூஸின் ‘ஆழி சூழ் உலகு’, சமீபத்தில் வெளியாகியுள்ள சு. வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ போன்ற நாவல்கள் பொன்னீலனின் ‘தெற்கிலிருந்து’ கட்டுரைத் தொகுப்பு, ஆகியவை உள்ளிட்ட பல நூல்கள், இன வரைவியல் வரையறுத்திய விதத்தில் கூறப்படவில்லை என்றாலும் குறிப்பிட்ட இனக் குழுவின் தொழில், வாழ்க்கை, மொழி, நடத்தை ஆகிய பண்பாட்டு விஷயங்களைப் பேசுகிறது. இவர்களின் எழுத்தின் ஊடே, ஒரு ஒடுக்கப்பட்ட அல்லது அதிகார வர்க்கத்தின் தாக்குதலுக்கு ஆளான மக்களின் வேதனை பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

சமூகத்தின் பண்பாட்டு கூறுகள் எப்போதும் சிதைவதும், வளர்ச்சி பெறுவதுமான முன்னேறிச் சென்று கொண்டே இருக்கும். இது குறித்த ஆய்வுக்-கான நிறுவனங்கள் தமிழகத்தில் இல்லை. பழங்குடி மக்கள் எண்ணிக்கை ஒரு சதம் என்பதாலோ, என்னவோ தமிழகத்தில் மானுடவியல் துறை மிகக் குறைவு. சென்னைப் பல்கலைக்க கழகத்தில் 60 ஆண்டு காலமாக மானுடவியல் துறை இயங்கி வருகிறது. ஆனால் அதன் ஆய்வு கட்டுரைகளின் எண்ணிக்கை சில நூறு மட்டுமே. நெல்லை புனித சவேரியார் கல்லூரியில் நாட்டார் வழக்காற்று ஆய்வு மையம் கடந்த பத்து ஆண்டுகளாக சில முயற்சிகளை மேற்கொள்கிறது. பாண்டிச்சேரியில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறை இயங்குகின்றது. இவை கல்வி நிறுவனங்கள் சார்ந்தது. இன்னொரு புறத்தில் மத நிறுவனங்கள் நடத்துகின்ற சமூகம் குறித்த ஆய்வுகள், மானுடவியல் அணுகுமுறையில் இருக்கிறது. மத நிறுவனங்களின் முயற்சியை விட இடதுசாரிகளின் முயற்சி கூடுதலாக தேவைப்படுகிற காலம்.
எல்.எச். மார்கனின் மானுடவியல் நூலைப் படித்த பின்னரே, ஏங்கெல்ஸ்_ற்கு மனித குலம் குறித்த அடிப்படை தேடுதல்கள் எழுந்ததாக அவரே கூறியுள்ளார். வரலாற்று பொருள் முதல் வாத அடிப்படையிலான எங்செல்ஸ்_ன் படைப்புகள், குரங்கிலிருந்து மனிதன் உருவான கதை போன்றவை. மார்கனின் நூல் ஏற்படுத்திய வெளிச்சம் என்றால் தவறல்ல. இன்றைய சமூகத்தினை மார்க்சீய கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளவும் மானுட-வியல் துறை உதவி செய்யும். மைசூர் பல்கலைக்-கழகத்தில் மானுடவியல் துறையின் பேராசிரியராக இருந்த எம்.என். ஸ்ரீநிவாஸன், சமஸ்கிருதமயமாக்கல், மேற்கத்திய மயமாகுதல் குறித்த கட்டுரைகள், இன்றைய சாதீய உணர்வுகளை புரிந்து கொள்ள உதவி செய்யும்.
சமஸ்கிருத மயமாக்கல் மூலம் வகுப்புவாதமும், மேற்கத்திய மயமாதல் மூலம் ஏகாதிபத்தியமும் பண்பாட்டு சிதைவை ஏற்படுத்துவதில் தீவிரமாக செயலாற்றுகின்றன. இதை எதிர் கொள்ள மானுடவியல் நூல்கள் உதவி செய்யும். இன்றைய சமூகமயமாதல், குடும்பம், கல்வி நிறுவனம் கடந்து வாழும் சமூக நண்பர்கள் மூலமும் நடைபெறுகிறது. குழந்தைகளின் சமூகமயமாதலில் குடும்பம் மற்றும் கல்வி நிறுவனம் ஆகியவற்றின் பங்கு இன்றியமை-யாதது. மானுடவியலை கற்பதில் கல்வி நிலையங்-களுக்கு உள்ள பங்கினைப் போலல்லாமல், குடும்ப ரீதியிலான சுய முயற்சியும் சிறந்த பங்களிப்பு செய்யும். எனவே மானுடவியல் நூல்களை எல்லோரும் படிப்பது காலத்தின் தேவை என கொள்ளலாம்.


வெள்ளி, 11 ஜூன், 2010

அரசு - வேலை - உரிமை 2

அரசு - வேலை - உரிமை 2

மின்னஞ்சல்அச்சிடுகPDF

கார்ல் மார்க்ஸ் இங்கிலாந்தின் பொருளாதார கொள்கை குறித்து குறிப்பிட்ட உண்மையை, இந்திய மண்ணிலும் காண முடியும். இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நீண்ட காலம் அதிகாரம் செலுத்தியதால் ஏற்பட்ட தாக்கங்களில் ஒன்றாக பொருளாதார ஏற்றத் தாழ்வும் இருக்கிறது. உதாரணத்திற்கு கடந்த 2007ஆம் ஆண்டு இறுதியில், நாடாளுமன்றத்தில் டாக்டர். அர்ஜூன் சென் குப்தா தலைமையிலான குழுவின் ஆய்வறிக்கை முன்வைக்கப்பட்டது. இதில் 77.3 சதமான இந்திய மக்கள், நாளன்றுக்கு ரூ.20/ மட்டுமே செலவிடுவோராக உள்ள பரிதாப நிலையை சுட்டிக்காட்டி உள்ளார்.

நாளன்றுக்கு ரூ. 20/_ செலவிடும் மக்களால், இந்திய முதலாளித்துவமும், உலக முதலாளித்துவமும் குறி வைத்து செயல்படுகிற சந்தையில் இருந்து பொருள்களை விலைக்கு வாங்க இயலுமா? இயலாது என்ற நிலையில்தான் பொருள்கள் தேங்கி நிற்கிறது. சந்தைகளிலும் பெருமளவில் பொருட்கள் விற்பனையாவதில்லை. இந்திய முதலாளித்துவ ஆட்சியாளர்கள் குறிப்பிடுகிற 8சத வளர்ச்சி சந்தை தேக்கத்தை உடைக்க உதவிடவில்லை. தனிநபரின் வருமானமும், செலவிடும் தொகையும், மக்களின் வாங்கும் சக்தியும் அதிகரிக்காமல், சந்தை தேக்கம் தகர்ந்து புதிய உற்பத்தி பெருகாது. புதிய உற்பத்தி பெருகாமல் வேலை வாய்ப்பு அதிகரிக்காது.

இந்த பொருளாதார சுழற்சி முறையை, முதலாளித்துவம் தனது அடித்தளமாக கொண்டுள்ளது. அதே நேரத்தில் லாபவெறி தலைக்கு ஏறுகிற போது, முதலாளித்துவம் தனக்கு எதிராக தன்னையே முன்னிறுத்துகிறது. இந்த முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கை தேவைக்கு ஏற்ப விநியோகம் என்ற முறையை பின்பற்றாமல், விநியோகத்திற்கு ஏற்ப தேவையை உருவாக்க முயற்சிக்கிறது. இதன் காரணமாக ஊக வணிகம், பங்கு சந்தையின் ஆதிக்கம், பணம், பொருள், பணம் என்ற பரிவர்த்தனை காலாவதியாகி, பணம் - பணம் - பணம் என்ற பரிவர்த்தனையை அடைகிறது. இது உற்பத்திக்கு மூடு விழா கொண்டாடுவதால், வேலை பறிப்புக் கொள்கை புதிதாக பிறந்திருக்கிறது.

இதற்கு மிக சிறந்த உதாரணம் அமெரிக்கப் பங்கு சந்தையின் வீழ்ச்சியும் அதைத் தொடர்ந்து உலகளவிலான தாக்கமும் ஆகும். அமெரிக்காவில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பல கோடி இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர். வங்கிகள் திவால் கணக்கு காட்டி உள்ளன. வாரத்திற்கு 14 வங்கிகள் அமெரிக்காவில் திவாலாகிக் கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது இன்றளவும் நீடிக்கிறது. அதன் காரணமாக பன்னாட்டு முதலாளிகளின் பணம் முடமாகி அவர்களின் தொழிலும் முடமாகியுள்ளது. அது வேலை இழைப்பையும், உலக ஏற்றுமதி _ இறக்குமதி கொள்கை மீதான பாதிப்பையும் உருவாக்குகிறது. துபாயில் கட்டடங்களை விட்டு விட்டு பொருள்களை அள்ளிக்கொண்டு ஓடியது மறக்க முடியாத தொலைக்காட்சி செய்தி. இதன் தொடர்ச்சியாக ஐரோப்பிய யூனியன் முழுவதும் பாதிப்பு அடைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. கிரீஸ், பின்லாந்து போன்ற நாடுகள் பெரும் சரிவை சந்தித்ததன் காரணமாக அங்கே பெரிய அளவிலான கிளர்ச்சிகள் வெடித்துள்ளன.

இந்தியாவிலும் கூட குஜராத் மாநிலத்தில், நகைத் தொழில் பாதிப்பை சந்தித்து, 10 லட்சம் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை பாதித்துள்ளது. திருப்பூர் பின்னலாடைத் தொழிலின் உற்பத்தி தேக்கம் சுமார் 45 ஆயிரம் தொழிலாளர்களின் வேலையைப் பறித்துள்ளது. கட்டிடத் தொழில், ரியல் எஸ்டேட் தொழில் போன்றவை, புதிய நடுத்தர வர்க்கத்தினரின் முதலீடு குறைந்ததால் தேங்கி நிற்கிறது. ஆட்டோ மொபைல் தொழில் சரிவை நோக்கி சென்று இப்போது தன்னை சமாளித்துக் கொள்ளும் நிலையை அடைந்திருக்கிறது. புதிய நடுத்தர வர்க்கமான, தகவல் தொழில் நுட்பத் திறனாளிகள், வேலையை இழப்பதற்கு பதிலாக சம்பளத்தைக் குறைத்துக் கொள்வது மேல் என முடிவு செய்து செயல்படுகின்றனர். இவை அனைத்தும் கடந்த 2009 துவக்கத்தில் இருந்து இறுதி வரை வெளிவந்த செய்திகள். இந்திய தொழிலாளர் துறை அமைச்சர் மேற்படி கொள்கை காரணமாக 10 லட்சம் பேர் வேலை இழந்ததாக குறிப்பிட்டார். இவை நம் சம காலத்து முதலாளித்துவத்தில் நெருக்கடிகள் ஆகும்.

இதே சமகாலத்தில், முதலாளித்துவம் தனது நலனையோ, வருமானத்தையோ குறைத்துக் கொள்ளவில்லை. உலகக் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அவர்களின் போட்டியாளர்களாக இந்திய முதலாளிகளும் உயர்ந்துள்ளனர். 2004இல் 5000 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து மதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை 15க்குள் இருந்தது. தற்போது 52பேரின் சொத்து மதிப்பு 5000 கோடி ரூபாய்க்கும் மேலாக உள்ளது. தமிழகத்திலும் கூட அத்தகைய பெரும் பணக்காரர்கள் உயர்ந்து வருகின்றனர். கடந்த 2009இல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற நேரத்தில், இந்திய முதலாளிகள், வெளியுலகிற்கு தெரியப் படுத்தாமல் பதுக்கிய கறுப்புப் பணம், சுமார் 75 லட்சம் கோடி ரூபாய் சுவிட்சர்லாந்து நாட்டு வங்கியில் இருப்பதாக எதிர்கட்சிகள் தெரிவித்தன. எனவே, முதலாளித்துவத்தின் நெருக்கடி ஆலை மூடலை, ஆட்குறைப்பை உருவாக்குகிற அதே நேரத்தில், முதலாளிகளை பாதிக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியும். அமெரிக்காவில் வங்கிகள் திவாலானபோது, அமெரிக்க அரசு 70 ஆயிரம் கோடி ரூபாய் வாரி வழங்கியது. வேலை இழந்த தொழிலாளர்களுக்கு அது போன்ற கருணை அளிக்கப்பட்டதாக அறிய முடியவில்லை.

இன்னொரு புறம் முதலாளித்துவத்தின் நெருக்கடி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத நாடாக சீனா இருந்தது குறிப்பிடத்தது. சீனாவிடம், அமெரிக்கா கடன் பெற எந்தவித தயக்கமும் காட்டவில்லை. அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், சீனாவிற்கு நேரடியாகச் சென்று அமெரிக்காவிற்காக யாசகம் கேட்டார் என்றால் அது மிகையல்ல. சீனாவின் கொள்கை முதலாளித்துவ கொள்கையில் இருந்து மாறுபட்டதாக இருந்ததே இதற்கு காரணம்.

சீன அரசு தங்கள் கொள்கை சோசலிசத்தை நோக்கிச் செல்லும் தன்மையுடையது. அதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாக சொல்கிறார்கள். முழுமையாக சோசலிசக் கொள்கையை அமலாக்காத நிலையிலேயே சீன அரசு உலகின் வளர்ந்த நாடுகள் சந்தித்த சரிவை எதிர் கொள்ளாமல் முன்னேற முடிந்திருக்கிறது. சோசலிசக் கொள்கையை சென்றடையும் நிலைக்கு சீன அரசு சென்று விட்டால், அதன் பொருளாதார வலிமை, உலகில் யாரும் எட்ட முடியாத ஒன்றாக இருக்கும். இன்றைக்கு சீன அரசின் கொள்கை வேலைப் பறிப்பை உருவாக்கவில்லை. உலகில் சிறு தொழில்களை அழிப்பதையே உலகமயமாக்கல் கொள்கை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. ஆனால் சீனாவின் கொள்கை சிறு தொழில்களையும், சிறு உற்பத்தியாளர்களையும் பாதுகாக்கும் தன்மை கொண்டதாக இருப்பதன் விளைவே, அமெரிக்காவிற்கு கடன் கொடுக்கும் அளவிற்கு முன்னேற வழிவகை செய்துள்ளது.

மேற்படி நிகழ்வுகளில் இருந்து வேலையின்மை அல்லது வேலைப் பறிப்பதற்கு காரணம் முதலாளித்துவ லாபவெறி என முடிவுக்கு வரலாம். இதைக் குறிப்பிடுகிற போது முதளாளித்துவ சமூகத்திற்கு முந்தைய சமூதாய அமைப்புகளில் வேலையின்மை இல்லையா என கேட்கலாம். நிலப்பிரபுத்துவ காலத்திலேயோ அதற்கு முந்தைய அடிமைச் சமூதாய காலத்திலேயோ சுரண்டல் கொடூரமாக இருந்திருக்கிறது. வேலை பெரும் பிரச்சனையாக உருவெடுத்திருக்க நியாயம் இல்லை. ஆனால், மனிதர்களை கூட்டம் கூட்டமாக குடும்பம் குடும்பமாக அடிமைகளாக்கி உழைக்கச் செய்து, சோற்றை மட்டும் கூலியாக கொடுத்தார்கள். மானத்தை மறைக்க கொஞ்சம் துணியும் கொடுத்தார்கள். வேலையில்லை என்ற பிரச்சனை எழுந்திருக்க வாய்ப்பில்லை. மாறாக, வேலை செய்ய முடியாமல் அடிமையாக இருக்க முடியாது, என்ற எதிர்ப்புகள் இருந்திருக்கிறது. ஒவ்வொரு கால எதிர்ப்புகளும் போராட்டங்களும் இருந்திருக்க கொடூரமான கொலைகளும், கொடுமைகளையும் ஆளும் வர்க்கங்கள் அரங்கேற்றி இருக்கின்றன.

எனவே தான் கார்ல் மார்க்ஸ “மனித குல வரலாற்றை வர்க்கப் போராட்டங்களின் வரலாறு’’ என கூறியுள்ளார்.