தலித் உரிமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தலித் உரிமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 28 அக்டோபர், 2010

அரசுக்குத் திட்டம் இருக்கிறது, திறம் இல்லை

யானை அளவு திட்டத்தினை உருவாக்கும் அரசு, பூனை அளவு கூட அதை அமலாக்குவதில்லை.
இப்படி ஒரு விமர்சனத்துடன் தான், பட்டியலினத்தவருக்கான திட்டங்களில் ஒன்றான, சிறப்பு உட்கூறு திட்டங்கள் குறித்து விவாதிக்க முடியும் இந்தியாவில், 1980-81 காலங்களில், தலித் மற்றும் பழங்குடி மக்களின் முன்னேற்றத்திற்காக, சிறப்புக் கூறு நிதியை ஒதுக்கீடு செய்து, பட்ஜெட் அறிக்கையுடன் இணைத்து அமலாக்குவது என முடிவெடுத்தனர். இதை சிறப்புக்கூறு திட்டம் எனவும், பின்னர், துணைத்திட்டம் எனவும் குறிப்பிட்டனர். தலித் மற்றும் பழங்குடி மக்களின், மக்கள் தொகைக்கு ஏற்ப பட்ஜெட் தொகையில் நிதி உருவாக்கி, அந்த நிதியை சம்பந்தப்பட்ட மக்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்குப் பயன்படுத்துவது நோக்கம் என்றும் கற்பித்தனர். தலித் அறிவாளிகள் துவங்கி பலரும் வரவேற்ற திட்டமாக இருந்தது. மத்திய அரசும், மாநில அரசும் இத்திட்டத்தை அமலாக்குவதற்கான முன்மொழிவுகளையும், ஆலோசனைகளயும் நிறையவும், பலமுறை விவாதித்தும், உருவாக்கி விட்டனர். ஆனாலும் அமலாகவில்லை.

தமிழ் நாட்டில் ஓரளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பதை மறுக்க முடியாது. 2005-06 பட்ஜெட் ல், 2104.55 கோடி ரூபாயும், 2006-07 பட்ஜெட்- ல், 3117.86 கோடி ரூபாயும், 2007-08 பட்ஜெட்-ல் 3356.88 கோடி ரூபாயும், 2008-09 பட்ஜெட்- ல், 4178.31 கோடி ரூபாயும், 2009-10 பட்ஜெட்-ல், 4602.68 கோடி ரூபாயும் திட்ட இலக்காக குறிப்பிடப்பட்டுள்ளது. 2010-11 பட்ஜெட்-லும் 3828 கோடி ரூபாய் என முதல் முறையாககூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

முப்பது ஆண்டுகால அனுபவத்தில் நாம் விவாதிக்கும் சிறப்பு கூறு அல்லது துணைத்திட்ட நிதி குறித்து அறிவு ஜீவிகள் தவிர சாதாரண பொது மக்களுக்கு எதுவும் தெரியாது. மற்றொரு புறம் கடன் அல்லது தாட்கோ நிதி என்றும் தான் பெரும்பாலும் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. எப்படி பல பத்தாண்டுகளாக இட ஒதுக்கீடு உரிமையைப் பலரும் பயன்படுத்த முடியாமல் இருக்கிறார்களோ, அல்லது பயன் படுத்துவது புரிந்து கொள்ளப் படவில்லையோ, அது போலவே, பட்டியல் இனத்தவர்களுக்கான சிறப்பு துணைத்திட்ட நிதி ஒதுக்கீடும் சம்மந்தப்பட்டவர்களைச் சென்றடையவில்லை. இது அரசுக்கும், அதிகார வர்க்கத்திற்கும் வசதியாக அமைந்துவிட்டது. எனவே தான் அரசு இந்த நிதியை வேறு பல திட்டங்களுக்கு திருப்பி விட துணிகின்றனர். மிக சமீபத்தில், மத்திய அரசு காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் செலவினத்திற்காக பட்டியலினத்தவருக்கான நிதியை திருப்பி விட்டது. மாநில அரசு, தான் ஒதுக்கிய நிதியை, வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கப் பயன்படுத்தி உள்ளனர். சமத்துவபுர வீடுகளுக்கும் பயன்படுத்தியுள்ளனர். கேள்விகள் எழுந்த போது, பட்டையலினத்தவருக்கு தானே, தொலைக்காட்சி பெட்டி, வீடு கொடுத்தோம் என்கின்றனர். அப்படியானால் சிறப்பு ஒதுக்கீடு என்பதற்கு என்ன அர்த்தம். இதர சாதிப் பிரிவினருக்கு தனி நிதி ஒதுக்காமல், மேற்படி பொருள்களை வழங்கும் அரசு, தலித்துகள் பெயரில் நிதி ஒதுக்கீடு செய்து ஏமாற்றுவது, இதுவரை புரிந்து கொள்ளப் பட வில்லை
.
பட்டியலினத்தவர் துணைத் திட்டம் உருவாக்கப் பட்ட நோக்கமான, தொழில், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற நோக்கங்களில், ஆட்சியாளர்கள் முரண்பாடுகிற இடத்தை, நாம் உணரமுடியும். பட்டியல் இனத்தவர், பொருளாதார ரீதியில் முன்னேறி விடக் கூடாது என்பதற்காகவே, துணைத்திட்ட நிதியை, வேறு தேவைகளுக்கு செலவிட துணிவு காட்டுகிறார்களா? என்ற சந்தேகம் தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக வேலை மற்றும் தொழில் குறித்த வாய்ப்புகளை பட்டியலினத்தவருக்கும், பழங்குடியினத்தவருக்கும், ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதியைப் பயன்படுத்துவதன் மூலமே, திட்டத்தின் நோக்கமான சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை ஒடுக்கப் பட்ட மக்கள் அடைய முடியும். வேலை அல்லது தொழில் ஆகியவை, சுயமரியாதையை உயர்த்த்க் கூடியது என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆனால் மத்திய அரசும், மாநில அரசும் இந்த துறையில் முன்னேற்றத்தை எட்ட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் செயல்பட வில்லை. உதாரணத்திற்கு தமிழ் நாட்டில், 2618.56 கோடி ரூபாய் கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்டது. இதில், வேலை அல்லது தொழில் தேவைக்காக, 9 வகையான திட்டங்கள் அல்லது செயல் பாடுகள் மூலமாக, 144.92 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப் பட்டுள்ளது. இது மொத்த ஒதுக்கீட்டில், 5.53 சதமானம் ஆகும். இதன் மூலம் பலனடந்தவர்கள் 95742 நபர்கள். மொத்த பட்டியலினத்தவர் மக்கள் தொகையான சுமார் 1.25 கோடியில், அரசுத் திட்டத்தால் பலனைந்தவர்களை ஒப்பிட்டால் அது வெறும் 0.79 சதமானம் மட்டுமே. சமூக அந்தஸ்து படிநிலையில், முக்கியப் பங்கு வகிக்கிற, பொருளாதார முன்னேற்றத்திற்கு, வழி செய்யும் வேலை மற்றும் தொழில் வாய்ப்பை, அரசு புறக்கணிக்கிறது என்பதே, இதன் மூலம் நாம் அறிவது ஆகும்.

பலனடைந்த குறைந்த பகுதி மக்களிலும் கூட, 63295 நபர்கள் சுய உதவி குழுக்களைச் சார்ந்த தலித் பெண்கள். மூன்று வகையான திட்டங்கள் மூலம் சுய உதவிகுழுக்களைச் சார்ந்த பெண்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர் அல்லது நிதி உதவி போன்ற கடன் பெற்றுக் கொடுத்துள்ளனர். இதன் மூலம் சிறு பலன் இருக்கலாம் மறுக்கவில்லை. ஆனால் தொழில் வாய்ப்பையோ, வேலை வாய்ப்பையோ எந்த வகையில் உயர்த்துவதற்கு, மேற்படித் திட்டங்கள் உதவிடும்? மற்றொரு புறம் குடிமைப் பணி அதிகாரிகளை உருவாக்கும் பயிற்சி (சிவில் சர்வீஸஸ்) கொடுக்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 88 நபர்கள் மட்டுமே பயிற்சியளிக்கப் பட்டனர், என்ற செய்தி, பேரதிர்ச்சியாக இருக்கிறது. சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் தகுதியை உருவாக்குவதற்கு ஏன் அரசு வடிகட்டி தேர்ந்தெடுக்கிறது? பல லட்சம் நபர்கள் எழுதும் தேர்வுக்கு தமிழகத்தில் ஒரு சில ஆயிரம் பட்டியலினத்தவரை தயார் செய்வது குறித்து ஏன் ஆலோசிக்க வில்லை?. ஒரு வேளை சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறவில்லை யென்றாலும், வேறு தேர்வுகளுக்கு பலனளிக்கும் என்பதை ஏன் மதிப்பிடவில்லை?.

இதை விமர்சனக் கண்ணோட்டத்தில் பார்த்தால், ஆண்டுக்கு பல லட்சம் பணியிடங்களை அழித்தொழிக்கும், மத்திய, மாநில அரசுகளின் பொருளாதார கொள்கை, சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கான தேர்வை இடைவெளி இல்லாமல் நடத்துவது ஏன்?. என்ற கேள்வி எழுகிறது. உதாரணத்திற்கு, பொதுத்துறை மற்றும் மத்திய அரசுத் துறைகளில் மட்டும் சுமார் 20 லட்சம் பணியிடங்கள் அழிந்துள்ளதாக கூறுகின்றனர். மத்திய அரசு இட ஒதுக்கீடு கொள்கைப்படி 3 லட்சம் தலித் இளைஞர்களுக்கும், மாநில அரசு இடஒதுக்கீடு கொள்கைப்படி 3 லட்சத்து 60 ஆயிரம் தலித் இளைஞர்களுக்குமான வேலை வாய்ப்பு பறிக்கப் பட்டிருக்கிறது. இத்தகைய பணியிடங்களைப் பாதுக்காக்கிற வகையில் துணைத்திட்ட நிதியைப் பயன்படுத்தி இருந்தால் கூட துணைத்திட்ட நிதி பலனுள்ள வகையில் செலவிடப்பட்டிருக்கும்.

தொழில் துறையில் படித்த இளைஞர்கள் ஆர்வம் காட்டுவது தவிர்க்க இயலாதது. காலம் காலமாக தன் முன்னோர்கள் செய்த வேலைகளை செய்ய வேண்டும், என எதிர் பார்ப்பது அநாகரீக சமூகத்தின் அனுகுமுறை என்றே கொள்ளப்படும்.. துணைத் திட்டம் 16 வகையான பயிற்சிகளை முன்மொழிந்திருக்கிறது. அந்த பயிற்சிகளுக்கான வேலை வாய்ப்பை அரசு உருவாக்கும் பொறுப்பையும் ஏற்கும் போதுதான் இளைஞர்களுக்கு, நம்பிக்கை ஏற்படுத்த முடியும். சில விவாதங்கள் தொடர்ந்து முன்வைக்கப் படுகிறது. ஏன் விவசாயத் தொழிலாளர் குடும்பத்தில் இருந்து, படித்த இளைஞர்கள் சிலருக்கு, அறுவடை இயந்திரங்களை கடனாக கொடுக்க நடவடிக்கை எடுக்க கூடாது?. ஆனால் அரசு, கடந்த ஓராண்டு காலத்தில் 832 நபர்களுக்கு மட்டுமே சுய வேலைவாய்ப்பு அடிப்படையில் கடன் கொடுத்துள்ளது. 10.09 கோடி மட்டுமே இதற்காக செலவிடப் பட்டுள்ளது. இன்றைய தொழில் கொள்கை காரணமாக, சில்லரை வர்த்தகத்தில் கூட பெறும் பணக்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே துணைத்திட்ட நிதியினை, மாநில அரசு தனித்தனியாக கொடுத்து சிதைக்காமல், பலரை இணைத்து, கூட்டுறவு முறையில் தொழில் துவங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப் பட்டால் அரசே, கொள்முதல் நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும்.
காலத்திற்கு ஏற்ற இத்தகைய அனுகுமுறையை துணைத்திட்ட நிதியைக் கையாளுவதில் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால், திரைபட நகைசுவை போல் வரும் ஆனால் வராது. இது மிக சீரிய விவாதத்திற்குறிய ஒன்று, கடந்த 30 ஆண்டுகளில் அரசு இந்த துணைத் திட்ட நிதியை எப்படி பயன்படுத்தியுள்ளது என்ற வெள்ளை அறிக்கை வெளியிடுவது அவசியம். ஏமாற்றப் பட்டு வரும் பட்டியலினத்தவரை, தொடர்ந்து திட்டத்தின் பெயர்கள் கொண்டு, ஏமாற்றாமல், செயலுக்கு கொண்டு வர அரசு அசைவது அவசியம்.

நன்றி தீக்கதிர் 27 அக்டோபர், 2010

வியாழன், 13 மே, 2010

தலித் உரிமை மனித உரிமையே!

தலித் உரிமை மனித உரிமையே!





பிறமலைக் கள்ளர் என்கிற சாதியினர் அதிகம் வாழும் பகுதி மதுரை மாவட்டம். எட்டு நாடுகளைக் கொண்டதாக சொல்லப்படும் இந்தப் பகுதியில், செக்கானூரணியை அடுத்த கொக்குளம் முக்கியமானது. இது ஒரு நாடு என்றழைக்கப்படுகிறது. இந்த மக்களின் பிரதான வழிபாட்டு மரியாதை, பேய்க்காமன் என்கிற நாட்டார் தெய்வத்திற்கு வழங்கப்படு கிறது. இத்தெய்வத்திற்கு பூசை புனஸ் காரங்களை நிகழ்த்துபவர் ஒரு பறையர். கள்ளர்கள் கோவிலாக இருந்தாலும், தீண்டத் தகாதவர்களுக்கும் வழிபாடு செய்ய உரிமை உண்டு. இக்கோவிலின் நான்காம் நாள் திரு விழா பறையர்களுக்கானது, என்று லூயிஸ் டூமாண்ட் என்ற பிரெஞ்சு நாட்டு மானுவியல் அறிஞர், தனது பிரமலைக் கள்ளரின் சமூக அமைப்பு மற்றும் மதம் எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். லூயிஸ் டூமாண்ட் தனது ஆய்வினை பிரமலைக் கள்ளர் வசிக்கும் அனைத்துப் பகுதிகளிலும், சுமார் 2 ஆண்டு காலம் (1957-59) தங்கியிருந்து ஆய்வு நடத்தி தெரிவித்த தகவல்களில் ஒன்றுதான், மேலே நாம் குறிப்பிட்டது. இன்றைய நிலை குறித்து விசாரித்த போதும், ஆமாம், பறையர் சாதியைச் சார்ந்த மனிதர் பூசை செய்து தருகிற பொருள் களை பக்தியோடு கள்ளர் சாதியைச் சார்ந்த மனிதர்கள் பெற்றுக் கொள்வதைப் பார்க்க முடியும், என்கிறார்கள். இது நெடுங்காலமாக, தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப் பட்டுவரும் உண்மை என்பதை தமிழகத்தின் பெரும்பான்மை மக்கள் அறியாதது.
சாதிய ஆதிக்கத்தின் மிக பிரதானமான ஒரு மையத்தில் சாதிப் பெயரில், மனுஸ்மிருதி அல்லது வர்ணாசிரமம் குறிப்பிட்ட தீட்டு தூக்கி எறியப்பட்டு இருக்கும் நிலையில், பிற பகுதியில், அதே சமூகத்தவரும், இதரரும் பின் பற்றுவது ஏன்? என கேள்வி எழுகிறது. இந்தியாவில், சமூகக் கொடுமைகள் மற்றும் சாதிக் கொடுமைகளுக்கு எதிராக போர் தொடுத்த பெருமை தமிழகத்திற்கு நூற் றாண்டு காலமாக இருந்து வந்தாலும், இன்னும் அழிக்கப்படாமலேயே இருக்கிறது. எனவே, அவ்வப்போது, இத்தகைய சமூக அவலங் களை எதிர்க்கும் மக்கள் இயக்கம் தேவைப் படுகிறது. இதன்மூலம் இரண்டு பணிகள் நடைபெறுகிறது. ஒன்று-அவலத்திற்கு எதி ரான நிலையான, தொடர் போராட்டம். மற் றொன்று, அடுத்தடுத்த தலைமுறைக்கு போராட்ட பாரம்பரியத்தைக் கற்றுத் தருவது.

சம்பவம் 1: சென்னையில் ஓடிய டிராம் வண்டிகளில், பணியாளர் நியமனத்தின் போது, பறையர் சாதியைச் சார்ந்த மனிதர் களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பிராமணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் தூய்மையான சாதி என்றழைக்கப் பட்டவர்களில் இருந்து நடத்துனர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர். இதை அயோத்தி தாசர் கண்டித்துள்ளார். காசு வாங்கும் போது ஏன் தீட்டாக கருதவில்லை, என கேள்வி எழுப்பி உள்ளார்.

சம்பவம் 2: 1924இல் சென்னை மாகாண அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. அதில் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைத்துப் பொது இடங்களையும் பயன்படுத்த உரிமை உடை யவர்கள் என்றும், பொதுச்சாலையில் எவரொருவரும் நடப்பதை தடுக்கும் நபருக்கு ரூ. 100/- அபராதம் விதிக்கப்படும், என்ற பிரிவும் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.

சம்பவம் 3: இதே 1924இல் கரூருக்கு அருகில் உள்ள ஆண்டாங் கோயில், ஊரில் இருந்த அக்ரஹாரத்தின் வழியே, குதிரை சவாரி செய்த மாணவர் சி.ஆர். நடேசன் என் பவர் குதிரையில் இருந்து இறங்கி நடந்து செல் லாமல், குதிரை மீது சவாரி சென்றது, குற்றம் என்ற காரணத்தால், விசாரணை நடத்தி, பின் பெரியவர்கள் வருத்தம் தெரிவித்த காரணத் தால் மன்னிக்கப்பட்டார் என்று ஆஐனுளு நிறு வனத்தில் இயக்குனராக இருந்த பேரா. எஸ். நீலகண்டன் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் 4: 1969 ஜனவரியில் (வெண்மணி படுகொலை நடந்த 20 நாள்களில்), தஞ்சை மாவட்டம் காருகுடியில், தாழ்த்தப்பட்ட மக்கள், தங்களுக்கு சுடுகாடு கேட்டு நடத்திய போராட்டத்தை வரலாறு பதிவு செய்திருக் கிறது. ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட சுடுகாட் டிற்கு தனி வழி இல்லாத காரணத்தாலும், இதர சாதியினர் குடியிருப்பு வழியே பிணத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்காததாலும், வயல் வழியே சென்றுள்ளனர். இந்த சாவு ஊர்வலம் காரணமாக, 125 கலம் நெல் பாழாகிவிட்டது, என்று அவர்கள் மீது வழக்குத் தொடுக்கப் பட்டதாக மைதிலி சிவராமன், வெண்மணி காலத்தின் பதிவு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாம் மேலே குறிப்பிட்ட 4 சம்பவங்கள், தமி ழகத்தில் ஏற்கெனவே நடந்த சமூக கொடுமை யின் உதாரணங்கள், மூன்று தலித்துகளுக்கு எதிராகவும், ஒன்று பிற்படுத்தப்பட்ட மக்க ளுக்கு எதிராகவும் இருந்துள்ளது. பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு எதிரான சமூகத் தடைகள், இன்று முற்றாக ஒழிந்து விட்டது. ஆனால், தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் நீடிக்கிறது. அன்றைய சாதி முரண்பாடு பிரா மணர் மற்றும் பிராமணர் அல்லாதோருக்கு இடையில் இருந்தது. இன்றைய வடிவம் தலித் மற்றும் தலித் அல்லாதோருக்கு இடை யில் இருக்கிறது, என்று டாக்டர். ஆனந்த் டெல்டும்டே கூறியதை உண்மையாக்கும் விதத்தில்தான் 4 சம்பவங்களின் வளர்ச்சி உள்ளது.

தமிழகத்தில் ஆலய நுழைவு மட்டும் தீட் டாக கருதப்படவில்லை. ஒரே முடிதிருத்தகத் தில், முடி திருத்திக் கொள்வது, செருப் பணிந்து நடப்பது, துணிகளை சலவை செய் வது போன்ற வடிவங்களிலும், தலித்துகள் அனுமதிக்கப்படுவதில்லை. இன்றைய அறிவியல், தொழில்நுட்பத்தின் பாய்ச்சல் வேக வளர்ச்சி, சமூக வளர்ச்சியில் பிரதிபலிக் கச் செய்ய வேண்டும். அரசின் பாத்திரம் இதில் மிக கூடுதலாக இருப்பதை, அரசு உணரும் போது மட்டுமே சமூகத்தில் பின்தங்கியிருக் கும் மக்கள் உணர முடியும். அசமத்துவ வளர்ச் சிக்கு வித்திடும் இந்த முதலாளித்துவ அரசு எளிதில் செய்துவிடாது.

வேலைப் பிரிவினையை மையமாகக் கொண்டு மனித சமூகம் செயல்பட்ட காலத் தில், பழங்குடியினரிடத்தில், மேய்ப்பர்களிடத் தில், விவசாயிகளிடத்தில், நெசவாளர் களிடத்தில், சலவையாளர்களிடத்தில், நாவிதர்களிடத்தில் பல்வேறு தொழில் நுட்ப உணர்வு இருந்ததை மனித குல வரலாறு குறிப் பிட்டுள்ளது. அதே தொழில் நுட்பங்களின் காரணமாக இந்திய சமூகம், அவர்களை தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கியது. பிற நாடுகளில் அத்தகைய தன்மை உருவாக வில்லை என்பதை அறிய முடிகிறது. உதாரணத்திற்கு துணிகளை சலவை செய்த தொழிலாளர்களை, சுத்தமற்ற சாதி என முத்திரை குத்தியது, வர்ணாசிரமமும், மனுஸ் மிருதியும் ஆகும். உவர்மண், சலவைத் தூள், சோடா உப்பு உள்ளிட்ட பொருள்களைக் கையாளத் தெரிந்திருந்த தொழிலாளர்களுக்கு நவீனக் கல்வி கொடுக்காதது மட்டுமல்லா மல், சலவைத் தொழிலாளர், பள்ளர், பறையர், சக்கிலியர் சாதி மனிதர்களுக்கும் துணி துவைக்கக் கூடாது, என போதிக்கவும் செய் துள்ளது. இன்றுவரை அமலில் இருக்கிறது. சின்னப் பிரச்சனையாக மட்டுமே இது போன்ற மனித உரிமை மறுப்புகளை மதிப்பீடு செய்கின்றனர். இவை ஏற்படுத்தும் மன உளைச்சல், வலி போன்ற பாதிப்புகள் மதிப்பீடு செய்யப் படுவதில்லை. இத்தகைய குறைபாடு களுடைய ஆட்சியாளர், தங்கள் செயல்பாடின் மையினால் மனுவின் கருத்திற்கு வலுச்சேர்க் கின்றனர். மேலும் ஆட்சியாளர்கள், தாங்கள் இயற்றிய சட்டம் குறித்து பூரிப்படைகின்றனர். சட்டங்களை அமல்படுத்த மக்கள் இயக்கங் களின் போராட்டமே உதவியிருக்கிறது.

காலங்கள் உருண்டோடினாலும், பேய்க் காமனுக்கு தலித் பூசை செய்து கொடுத்தாலும், மாறாத இச்சமூகத்தில் தொடர் போராட்டம் தேவைப்படுவதை இடதுசாரி இயக்கம் மட்டுமே உணர்ந்திருக்கிறது. தனது கடந்த காலப் போராட்டங்கள் மூலம், செருப்பணிய வும், சைக்கிள் ஓட்டவும், குளத்தில் குளிக்க வும், ஆலயங்களில் வழிபடவும், முடிதிருத்த வும், துணி தேய்த்து அணிவதற்கும், மயானத் திற்கு பாதையை பெறவும், தலித் மக்களுக்கும் உரிமை உண்டு என்பதை நிலைநாட்டிய இயக்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். தமிழகத்தில் இதற்கான கருத்தை வலுப்படுத் தும் வகையில் மீண்டும் டிசம்பர் 25 ஐ தேர்வு செய்துள்ளது.

டிசம்பர் 25, 1968 இல் வெண்மணியில் 44 மனித உயிர்கள் (19 குழந்தைகள், 20 பெண்கள், 3 வயோதிகர்கள் உட்பட) எரித்து கொல்லப்பட்ட நாள். அதே டிசம்பர் 25, 1927 இல் ஈ.வே.ரா தன் பெய ருக்கு பின்னால் நாயக்கர் என்ற தனது சாதிப் பெயரை, இனிப் பயன்படுத்த மாட்டேன் என மறுத்த நாள். நானே நல்ல மேய்ப்பர் என்ற இயேசு பிறந்ததாக சொல்லப்படும் நாளும் டிசம்பர் 25 தான். அத்தகைய வரலாற்று முக் கியத்துவம் பெற்ற நாளில் தீண்டாமைக்கு எதி ராக, மனித உரிமைகளை நிலைநாட்டுவதற் காக ஒன்றிணைவோம், சமூக கொடுமை ஒழிப்போம்!


This was published in theekkathir on 22 DEc.2009