வியாழன், 12 நவம்பர், 2015
சனி, 16 ஆகஸ்ட், 2014
எத்தனை முறை தேடுவது வேலை!!!
ஞாயிறு, 18 மார்ச், 2012
கைகொடுப்பதில்லை
செவ்வாய், 17 ஜனவரி, 2012
வெள்ளி, 16 டிசம்பர், 2011
சனி, 19 மார்ச், 2011
பெண் மட்டுமல்ல!
விழிப்புணர்ச்சிக்கு எது
அளவு கோல்
தீர்மானிக்க முயற்சித்தால்
குற்ற உணர்வே எஞ்சி நிற்கும்.
இன்பமும் துன்பமும்
இனைந்தது தான் வாழ்க்கை
துளி இன்பம் கிடைத்தால்
பேரின்பத்தின் எல்லையாக
இருக்கக் கூடும் அவளுக்கு.
தொழிலாளியாகவும் மாறிவிட்டால்
பாவம் குழந்தைகள்
என்ன செய்கிறதோ
என்பதே மனநிலை.
நடுத்தர வர்க்கம் என்பதால்
கிடைத்தது கொஞ்சம் கல்வியும்
விழிப்புணர்வும்.
தெரித்து விழுகிறது வார்த்தைகளாய்
ரணத்தின் அவஸ்த்தைகள்.
இனைந்து வாழ்வது உன்பொறுப்பு
ஏனென்றால் அவள்
பெண் மட்டுமல்ல! தொழிலாளியும் கூட.
சனி, 12 மார்ச், 2011
தொழில் நுட்பக் கூட்டணி
சம்மன்களே சம்பாஷனைகள் ஆனதால்
திரைமறைவு பேரங்கள்
முடிவுக்கு வந்தது.
உயர் மட்டக் குழுவின் முடிவினால்
இனிப்பு வழங்கியவர்கள்
முடிந்து விட்ட பேரத்தினால்
இளிப்பைப் பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள்.
வீரமணிகளின் வீரவசனமும்
திருமாவளவன்களின் வேண்டுகோள்களும்
நாடகங்களுக்குள் நடந்த
உபகதைகளே.
63 முடியாது என்றவர்கள்
இப்போது ஒப்புக் கொண்டதற்கு
ரகசியங்கள் ஏதுமில்லை.
ஒன்னேமுக்கால் லட்சம் கோடி தி.மு.க.வை
நிர்பந்தித்தது புரிகிறது.
பா.ம.க.வும், முஸ்லீம் லீக்கும்
குறைத்து கொண்டதன் ரகசியம் என்ன?
கூட்டணி தர்மமா?.
நாடு நஷ்ட்டப் பட்ட
ஒன்னேமுக்கால் லட்சம் கோடியை
இன்னொரு நஷ்ட்டமான
இரண்டு லட்சம் கோடி நிர்பந்திக்கிறது.
2ஜி ஐ விட எஸ் பேண்டு
தொழில் நுட்பம்
மிக நுட்பமானது என்பதாலா?
ஆனாலும் உறுதியானது
தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி.
நாட்டின் கஜானாவைக் காலிசெய்ய
கற்றுக் கொண்ட தொழில் நுட்பம்
உதவி செய்வதால்.
சனி, 26 பிப்ரவரி, 2011
மலிவானவர்கள் தானா?
வயல் வெளிகள்,
ஏரிகள், குளங்கள் எங்களது.
படையெடுத்தது பன்னாட்டு நிறுவனங்கள்
திறந்த வீட்டிற்குள் புகுந்ததைப் போல்
வந்தவனின் வசதிக்காக
வளைத்தார்கள் சட்டங்களை
அதற்கு சலுகைகள் எனப் பெயரும்
சூட்டினார்கள்.
விரிந்து கிடந்த நிலப் பரப்பிற்கு
போதுமானதாக இருந்தது
கையளவுத் தொகை.
கடல்போல் காட்சியளித்த ஏரிகளில்
கட்டடங்கள் எழுந்ததால்
நிரம்பி வழிகிறது சாலைகள்.
ஊரெல்லாம் இருளில்
சிறுதொழில்களுக்கும் தடங்கல்
வந்தவனுக்கோ
தடையில்லா மின்சாரம்.
கல்விக் கடன் கேட்டவர் காத்துக் கிடக்க
வரிச்சலுகைகள் வெளிநாட்டு முதலாளிகளுக்கு.
இந்த தாரளங்களைச் சாதனைகள்
என்றார்கள் தமிழகத்து ஆட்சியாளர்கள்.
மகராஷ்ட்ராவும், குஜராத்தும்
போட்டியிட்டதால்,
வாட்(VAT) ஐயும் வெட்டிக் கொண்டதாக
பெருமையும் பேசினார்கள்.
இவ்வளவிற்குப் பின்னும்
கொசுரு கேட்ட
பன்னாட்டு நிறுவனங்களுக்கு
தாரை வார்த்தார்கள் தொழிலாளர்களை.
சட்டத்தைச் சாட்சிக்கு
அழைத்த தொழிற் சங்கங்களிடம்
பிதற்றினார் பிரதமர்
இந்தியத் தொழிலாளர் சந்தை
மலிவானது என்று.
வியாழன், 10 பிப்ரவரி, 2011
வெளிச்சத்திற்கு வரும் அர்த்தங்கள்
துறவுக்குமான உறவு
புரியாத புதிர்தான்
இதுவரை.
சிறப்புச் சொற்பொழிவுகள்
இசை நிகழ்வுகள் மூலம்
அவிழ்க்கத் துவங்கியுள்ள புதிர்கள்
ஆளும் கட்சியுடன் போட்டியிடும்
ஃபிளக்ஸ் விளம்பரங்கள்
5000 இசைக் கலைஞர்களுடன் நாதவைபவம்
சிரீ ராம் கேட்வே நடத்துவதாக
சிரீ சிரீ ரவிசங்கரின் சிரித்த முகத்துடன்
மந்தையில் கட்டப் பட்ட மாடுகளுக்கு
இனவிருத்தியைத் தடைசெய்யும்
நிகழ்வுநினைவுக்கு வருகிறது.
துறவிற்கும் இனவிருத்திக்கும்
தொடர்பில்லைதான்
ஆனாலும் கேள்விகள்
அண்ணா பல்கலைக் கழகம்,
நெய்வேலி நிர்வாகம், திருப்பூர் முதலாளிகள்
சிரீ ராம் கேட்வே, பெங்களூர் நிர்வாகங்கள்
தியான நிகழ்ச்சிகளுக்கும் இசை நிகழ்ச்சிகளுக்கும்
அரங்கம் அமைக்க என்ன காரணம்.
கேட்டதைத் தராத முதலாளிகள்
கேட்காமலேயே இதைத் தருவதற்கு
நோக்கம் இல்லாமல் இருக்குமா?
ஐ.டி போன்ற தொழில் நுட்பம் கற்ற இளைஞர்களை
அமைதிப்படுத்த முயற்சிப்பது ஏன்?
பணி நேரமான 10 மணிநேரத்தை
12 ஆக உயர்த்தினாலும் பல் காட்டி
அடங்கிப்போக வேண்டும் என்பதற்காகவா?
இப்போது புரிகிறது
வாழும் கலைக்கான அர்த்தம்
நன்றி: தீக்கதிர்