தீர்ப்பு
ஒரு
விடுமுறை நாளின்
மழை ஓய்ந்த ….
மாலைப் பொழுது
நகர வாழ்வின்
நரக ஓட்டங்களற்ற ஓய்வு
சிரிப்பும் களிப்புமாய்
சிற்றுண்டி இடையே சிறு சர்ச்சை
“யார் முதலில் சாப்பிட்டது?”
நாட்டாமை செய்ய
நயமாய் முன் வந்தது
நான்கு வயது பெண் குழந்தை.
அப்பாவின் காதருகே
தளிர்க்கரம் குவித்து
செவ்விதழ் விரித்து
திருவாய் மலர்ந்தது
”அப்பா நீ தான் ஃபர்ஸ்ட்”
அதேபோல் அம்மாவிடமும்
“அம்மா நீ தான் ஃபர்ஸ்ட்”
அண்ணாவிடமும் கூட …
“அண்ணா நீ தான் ஃபர்ஸ்ட்”
இறுதியாய்…
தன் காதருகே
தளிர்க்கரம் குவித்து
தீர்ப்பைத் திருத்திச் சொன்னது
“நான் தான் ஃபர்ஸ்ட்”
எஸ்.பிரேமலதா
Super
பதிலளிநீக்கு