வெள்ளி, 30 ஜூலை, 2010

கியூபா


கியூபா: சாதனை அல்ல... சரித்திரம்!

சமீபத்தில் வணிகப் பத்திரிகை ஒன்றில் தொடர் கட்டுரை எழுதி வரும் எழுத்தாளர் சாருநிவேதிதா தன்னைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். சிறு பத்தி ரிகையில் எழுதிய காலத்தில் தன்னை பக்கத்து வீட்டுக்காரர் அறிந்திருக்கவில் லை என்றும் வணிகப் பத்திரிகையில் எழுதியவுடன்தான் தன்னைப்பற்றி பக்கத்து வீட்டுக்காரருக்கும் தெரிந்திருப் பதாக அங்கலாய்த்திருக்கிறார். இப்படி பக்கத்து வீட்டுக்காரரைக் கூட தெரிந் திருக்காத ஒருவர் உலகின் கண்ணிய மான சோசலிச நாடான கியூபா பற்றி தன்னுடைய தொடர் கட்டுரையில் அவதூறு பரப்பியிருக்கிறார். அவருடைய நண்பர் கியூபா சென்ற போது “பேயிங் கெஸ்ட்” (பணம் கொடுத்துத் தங்கும் விருந்தாளி) என்ற முறையில் ஒரு கியூபக் குடிமகனின் வீட்டில் தங்கியதாகவும், அப்போது உள்ளாடைகளைத் தொலைத் துவிட்டதாகவும், அந்த கியூபக் குடிமகன் வறுமை காரணமாக எடுத்துவிட்டார் என்றும் தன் மனம் போன போக்கில் எழுதி, கியூபாவை இழிவுபடுத்த முயன் றிருக்கிறார்.

ஜூலை 26. மாண்கடா படைத்தளத் தில் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் புரட்சியாளர்கள் தாக்குதல் தொடுத்த நாள். 57 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய முதல் புரட்சியின் தாக்குதல் தினத்தை கியூப அரசு தனது தேச விடுதலை நாளாக இன்றைக்கும் கொண்டாடி வரு கிறது. கியூபாவின் சாதனைகள் எண் ணற்றதாக இருந்த போதும், சில முத லாளித்துவ அறிஞர்கள் குறிப்பிட்ட சாத னை உதாரணங்களை சாருநிவேதிதா முன் வைக்க விரும்புகிறோம்.

வாஷிங்டனை விட கியூபா சுகாதாரப் பராமரிப்பில் முன்னேறியிருப்பதாக லண்டனில் இருந்து வெளியாகும் ‘கார்டியன்’ பத்திரிகையில் பிரிட்டிஷ் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இயான் கிப்சன் எழுதியிருக்கிறார். குறிப் பாக அமெரிக்காவில் 188 குடிமக்களுக்கு ஒரு டாக்டர் என்ற நிலை இருக்கிற போது, கியூபா 170 குடிமக்களுக்கு ஒரு டாக்டர் என்ற நிலையை எட்டி சாதனை படைத் திருக்கிறது என்பது அவரது கட்டுரை யின் சாராம்சம். உலகின் எண்ணற்ற நாடு களில் இயற்கைச் சேதாரங்கள் ஏற்படுகிற போதெல்லாம், உள்நாட்டுப் போர்களில் மக்கள் துன்புறுகிற போதெல்லாம், கியூப மருத்துவர்கள் நேரடியாகச் சென்று மனித நேயத்தின் மகத்துவத்தை உணரச் செய்த வர்கள். குறிப்பாக பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆகிய ஆசிய நாடுகளில் கியூப மருத்துவர்களின் பங்களிப்பு மகத்தானது.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் பணம் கொடுத்து மருத்துவம் பயிலும் வணிகப் பொருளாக கல்வி நிலைமை மாறிய போது, லத்தீன் அமெரிக்க மாணவர்களுக்காக கியூபாவில் மருத்துவக் கல்லூரியைக் கட்டி அதிலே பல்லாயிரம் மாணவர் களை இலவசமாக பயிற்றுவித்து மருத்து வர்களாக மாற்றிய சாதனை உலகில் வேறு எந்த நாடும் நிகழ்த்தாத சரித்திரம். வெனிசுலாவில் சாவேஸ் ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பு, பெரும் குற்றவாளி களின் தலைநகரமாக விளங்கியது காரகஸ் நகரம். ஆனால் சாவேஸ் ஆட்சி யைப் பிடித்தபின் கியூப மருத்துவர்களின் உதவியோடு காரகஸின் குடிசைப் பகுதி களில் சுகாதாரத்தை உறுதி செய்ததோடு 5000 கியூப மருத்துவர்களை நேரடியாக வரவழைத்து மருத்துவக் கல்வியின் மகத்துவத்தை எளிய மக்களுக்கும் விளக்கிய அனுபவத்தை சாவேஸே பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியா விடுதலை பெற்று 60 ஆண் டுகள் முடிந்துவிட்டன. இன்றும் 30 சத வீதத்திற்கும் அதிகமான மக்கள் எழுதப் படிக்க அறியாதவர்களாக இருக்கிறார் கள். ஆனால் கியூபா 1959 ஜனவரி 1ம் தேதி ஹவானா நகருக்குள் புரட்சிப் படை நுழைந்ததன் மூலம் புரட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 61ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 100 சதவீதம் கியூப மக்களுக்கு எழுத்தறிவித்த வெற் றியை கியூபா அறிவித்த போது உலகமே வியந்து போனது. கியூபப் புரட்சியின் வெற்றியைத் தாங்கிக் கொள்ள முடியாத அமெரிக்கா, பல கொடூரமான தாக்குதல் களை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் கல்வியில் பெரும் சாதனையை கியூபா நிகழ்த்தியது சாதாரணமானதல்ல.

தமிழ்நாட்டு கல்வியாளர் சா.சி. இராஜ கோபாலன் “கல்விக்கு கலங்கரை விளக் கம் கியூபா” என்ற தியாகுவின் நூலுக்கு அணிந்துரை எழுதுகிற போது; “கல்வி அமைப்பில் பெரும் பங்கு வகிப்பவர் ஆசிரியர் ஆதலின், ஆசிரியரை உரு வாக்குவதில் கியூபக் கல்வி மிகுந்த கவ னம் செலுத்துகிறது. கற்பித்தல் திறன் களோடு சமுதாய நோக்கு, மனித நேயம், மாணவரிடத்திலே தோழமை உணர்வு, பெற்றோரிடமும், மக்களிடமும், ஆசிரியர் கொள்ள வேண்டிய ஒட்டுறவு ஆகியவை வலியுறுத்தப்படுகிறது. ஆசிரியர் கல்விக் கூடங்களில் எந்நிலை பணியில் உள் ளாரோ, அந்நிலையில் 6,7 ஆண்டுகளா வது கற்பித்தல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நமது நாட்டிலோ , தொடக்கப் பள்ளியிலோ, உயர்நிலைப் பள்ளியிலோ ஒரு நாள் கூட கற்பிக்காதவர் ஆசிரியர், பேராசிரியர்களாக விளங்குகின்றனர்” என்று குறிப்பிடுகிறார்.

மேற்படி அணிந்துரை மூலம் நாம் புரிந்து கொள்வது, கியூபா மிகப்பெரிய அளவில் மனித நேயக் கல்வியை பள்ளிப் பருவத்திலேயே குழந்தைகளுக்குக் கற்றுத் தருகிறது என்பதாகும். அங்கே திருட்டுக்கும், இதர சமூக அவலங்களுக் கும், எந்தவிதமான முகாந்திரமும் இருப் பதை முதலாளித்துவ அறிஞர் பெரு மக்கள் கூட குறிப்பிடாதபோது, யாரை திருப்திப்படுத்த சாருநிவேதிதா கியூபா குறித்து அவதூறு பரப்பியிருக்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.

இந்தியா பல துறைகளில் பின் தங்கியிருக்கும் நிலையில் கியூபா பல துறைகளில் சாதனை படைத்திருக் கிறது. ஒன்று, மனிதவள மேம்பாட்டு அறிக்கை அடிப்படையில் இந்தியா 138வது இடத்திலும், கியூபா 51 வது இடத்திலும் இருப்பதாகும். இரண்டாவ தாக, இந்தியாவிலிருந்து ஒலிம்பிக்கில் இடம் பெறுவதே பெரிய விஷயம். ஆனால் குட்டி நாடு கியூபா பல பதக்கங்களை பெற்று 10 இடங்களுக்குள் தொடர்ந்து தன்னை தக்க வைப்பது ஆகும். மூன்றாவ தாக, கியூபாவில் கல்வி வணிகப் பொரு ளாக யாருக்கும் விற்கப்படவில்லை. ஆனால் இந்தியாவிலோ கல்வி வணிக மயமாக்கப்பட்டிருக்கிறது. இப்படி இந்தியாவோடு மட்டுமல்ல, உலகின் பல நாடுகளோடு ஒப்பிட முடியும்.

அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் 2007இல் அல்ஃபா, வில்மா புயல்களின் சூறைத் தாக்குதலின் போது ஜார்ஜ் புஷ் நிலை குலைந்து போய்விட்டார். அதே புயல்கள் கியூபாவையும் தாக்கின. கியூபா ஒரு சில நாட்களில் அனைத்து சேதாரங்களையும் சரி செய்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டது. குட்டி நாடு கியூபா, தன்னை 50 ஆண்டு காலம் பொருளாதாரத் தடை என்ற பெயரில் அமெரிக்க வருத்திக் கொண்டிருப்பதையும் மறந்து, தன் மனித நேயக் கரத்தை பிலடெல்பியா நோக்கி நீட்டியது. அமெரிக்காவின் கர்வம் அதை ஏற்க மறுத்தது. இதை உலகம் அறியும். 50 ஆண்டுகால பொருளாதாரத் தடை தொடர்ந்து இருந்த போதும், கியூபாவினால் அறிவியலில் , மருத்துவத்தில், கல்வியில், விளையாட்டுத் துறையில் பல்வேறு முன்னேற்றங்களை தன் சொந்தக் காலில் நின்று சாதித்து இருப்பதை ‘கார்டியன்’ பத்திரிகை 2006ம் ஆண்டு கட்டுரையில் வெளிப்படுத்தியிருக்கிறது.

சோவியத் யூனியன் 1990ம் ஆண்டு சோசலிச கொள்கையைக் கைவிட்ட நேரத்தில் கியூபாவுடனான அனைத்து வர்த்தகத்தையும் ரத்து செய்தது. சோவி யத்தை மட்டுமே நம்பி வர்த்தகத்தில் இருந்த கியூபா மிகப் பெரிய பொருளாதார மந்தத்தை சந்திக்க நேர்ந்தது. உலகின் எண்ணற்ற கம்யூனிஸ்ட்டுகள், மனித நேய ஆர்வலர்கள், நீட்டிய ஆதரவுக் கரத்தினால் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர் கியூப மக்கள். பெட்ரோல் உள் ளிட்ட எரிபொருள்கள் கிடைக்காத நேரத் தில் அன்றைய கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோ உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் சைக்கிளில் வலம் வந்ததை உலகப் பத்திரிகைகள் எழுதியிருக்கின்றன. 24 மணி நேரம் தொடர்ந்து மின் வெட்டை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் கியூப மக்கள் மீது திணிக்கப்பட்ட நேரத் திலும், உணவு நெருக்கடி அதிகரித்த போதிலும் கூட கியூபாவில் உள்நாட்டுக் கல வரங்கள், திருட்டுக்கள் போன்ற எது வும் நடக்கவில்லை. அப்படி நடந் திருந்தால் அமெரிக்காவும், அமெரிக்க ஆதரவு நாடுகளும், பத்திரிகைகளும் சும்மா இருந்திருக்குமா? என்பதை சாரு நிவேதிதா தான் விளக்க வேண்டும். இது போன்ற அவதூறுகளை அள்ளி வீசிய அமெரிக்காவையே எதிர்த்து நிற்கும் கியூபா மக்களுக்கு தமிழ்நாட்டு அவதூறு எழுத்தாளர்கள் அற்பமானவர்களே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக